உதகை, டிச.21- கோத்தகிரி அருகே வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்கள் கடித்து மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், உடனடியாக தெருநாய்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தி னர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த ஜக்கனாரை பஞ்சாயத்திற்குட்பட்ட அரவேனு காமராஜ் நகர் பகுதியில், 3 குழந்தைகள் உட்பட்ட 15 க்கும் மேற்ப்பட்ட வர்களை கடந்த சில நாட்களில், தெருநாய் கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பாதிப் புக்குள்ளாகினர். நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வெளியே நடமாடுவ தற்கே அச்சம் ஏற்பட்ட நிலையில், வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களை உடனடி யாக கூண்டு வைத்து பிடிக்கவேண்டும். நாய் கடியால் பாதித்த அனைவருக்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெ ழுத்து பெறும் இயக்கத்தில் ஈடுபட்டனர். இத னையடுத்து, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம். வாலிபர் சங்க மாவட்ட தலை வர் மணிகண்டன், கோத்தகிரி தாலுகா பொறுப்பாளர் ஆசைத்தம்பி, காமராஜ் நகர் கிளை அமைப்பாளர் தனபால் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், காமராஜ் நகர் ஊர் தலைவர் சங் கர், துறை ஆகியோர் பங்கேற்று கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனையடுத்து, காமராஜ் நகர் பகுதியில் மருத்துவர் புவ னேஷ்வரன் தலைமையில், மருத்துவ முகாம் நடைபெற்றது.