திருப்பூர், ஆக. 10 - திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டை யார் நகர் பகுதியில் தீர்வு காணப்படாத அடிப் படை பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகர மேயர் தினேஷ் குமாரிடம் நேரில் மனு கொடுத்து வலியுறுத் தினர். வாலிபர் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை மேயர் தினேஷ் குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பெரிச்சிபாளையம் மேற்கு 55 ஆவது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில், சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி பணி களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் இன்று வரை சரி செய்யாமல் குண்டும் குழியுமாக இருக்கின்றது. இதனால் பள்ளி மற்றும் கல் லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் இன்னல் களுக்கு இடையில் பயணிக்க வேண்டியுள் ளது. மேலும் ஒரு சில இடங்களில் வாகனங் கள் மாட்டிக் கொள்கின்றது. பகுதி முழுவ தும் சாக்கடைகள் சரிவர தூர்வாரப்படாமல் இருப்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உருவாகிறது, குழந்தைகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி மற்றும் குடியிருப்பு கள் அதிகமுள்ள நெருக்கடியான பகுதி, குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது வாரத்திற்கு இரு முறை சாக்க டையை சுத்தம் செய்து தர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்படுத்தக்கூடிய பட்டுக்கோட்டையார் நகர் மற்றும் ஷெரிப் காலனி இணைப்பு சாலை சரிவர பராமரிப் பின்றி இருப்பதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆகை யால் அந்த பகுதியில் புதிய தார் சாலை மற் றும் தெருவிளக்குகள் அமைத்து தந்தால் பொது மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருக் கும். ரெயின்போ காம்பௌண்ட், சின்னசாமி காம்பௌண்ட் பகுதிக்கு பாதாள சாக்கடை விரிவுபடுத்தி தந்து, நல்ல தண்ணீர் குழாய் அமைத்து தரும் வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும். வடக்கு பகுதி பொதுக் கழிப்பி டம் மராமத்து பணிகள் செய்து தர வேண்டும். மேற்கு பகுதி குடியிருப்பு ஓடைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க பாதுகாப்பு சுவர் அமைத்து தரவேண்டும். தென்னம்பாளை யம் காலனி மாநகராட்சி பள்ளியின் சுற்றுப் புற சுவர்களில் மரம் சாய்ந்ததை சரி செய்ய வேண்டும். காட்டுவளவு மற்றும் தென்னம்பா ளையம் காலனி பகுதியை இணைக்க கூடிய பாலத்தில் தெருவிளக்குகள் பொறுத்தி மக்க ளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண் டும் என கேட்டுக் கொண்டனர். இந்த மனு கொடுப்பதில், வாலிபர் சங்க முன்னாள் தெற்கு நகரத் தலைவர் ஆறுக்குட்டி, நகரக்குழு உறுப்பினர் அ.விக்னேஷ், பட்டுக் கோட்டையார் நகர் வடக்கு கிளைச் செயலாளர் மௌனிஷ் கண்ணன், மற்றும் கிளை நிர்வாகி கள் பா.விக்னேஷ், க. சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.