தருமபுரி, பிப். 13- போளையம்பள்ளி கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் காலை மாலை நேரத்தில் அரசு பேருந்து இயக்கவலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், போளையம்பள்ளி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலைக்கு செல்வோர் ஏராளமானோர் உள்ளனர். இங்கு குறித்த நேரத்தில், அரசு பேருந்து இல்லாததால் போளையம்பள்ளியில் இருந்து ஆர்.கோபிநாதம்பட்டிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் காலையில் உணவு சாப்பிடமுடியவில்லை மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி நவலையில் இருந்து சின்னகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரிக்கு காலை மாலை இருநேரமும் பேருந்து இயக்க வேண்டும் என மனு அளித்தனர். இதில், வாலிபர் சங்கத்தின், மாவட்ட செயலாளர் எம்.அருள்குமார், மாவட்ட நிர்வாகி சொ.கார்த்திக் ஆகியோர் மனு அளித்தனர்.