ஈரோடு, பிப். 6- பெருந்துறை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு வாலிபர் சங்கத்தினர் 40க்கும் மேற்பட்ட வர்கள் ரத்த தானம் செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பல்லக வுண்டம்பாளையத்தில் வியாழனன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் பலி யாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெருந் துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெருந்துறை தாலுகா மற்றும் ஊத்துக்குளி கமிட்டியின் சார்பில் உடனடியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று 40 யூனிட் ரத்ததானம் செய்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் கே.குப்புசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளர் கு.சதிஷ், தாலுகா செயலா ளர் செ.அஜித்குமார், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் து.நவீன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளார் எம்.லோகநா தன், திருப்பூர் மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.