districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மலைக் கிராமங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பென்னாகரம், ஜன.12- மலைக் கிராமங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கு மாறு, அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது  மேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிக்கிலி  ஊராட்சி, பனைக்குளம் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது. இந்நிலையில் , பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பாப்பாரப்பட்டி வாரச் சந்தை வெள்ளியன்று கூடுகிறது.  இந்நிலையில் மலைக்கிராம  மக்கள் புத்தாடை, காய்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி ஆகிய வற்றை வாங்கவும், விற்கவும் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு,  தருமபுரி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய உள்ளது.  மேலும், வேலை தேடி வெளியிடங்களுக்கு குடி  பெயர்ந்து சென்ற கிராம மக்கள் பொங்கல் திருவிழா வையொட்டி, ஊர் திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலை யில் தற்போது இயக்கப்படும் ஒரு சில பேருந்து சேவை மலைக்கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்கும் போதுமானதாக இல்லை.  எனவே, பிக்கிலியிலிருந்து பாப்பாரப்பட்டி வாரச் சந்தைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் பாலக்கோடு,  தருமபுரி, பென்னாகரம் பகுதியிலிருந்து இரவு நேரங்களில் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இக்கோரிக்கை மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் சேர்ந்த பிக்கிலி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராதிகா  அன்பரசு, அரசுப் போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல  பொது மேலாளர் மற்றும் பென்னாகரம் கிளை மேலாளர்  ஆகியோரிடம் நேரில் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கூடுதல் பேருந்து சேவைக்கு ஆவண  செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அப்போது சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். 

ஜன.16ல் இறைச்சி விற்பனைக்கு தடை

கோவை, ஜன.12- திருவள்ளுவர் தினமான ஜன.16 ஆம் தேதியன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திரு வள்ளுவர் தினம் ஜன.16 ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி விற்பது  தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி  இறைச்சிக் கடைகளை ஜன.16 ஆம் தேதியன்று திறக்கக் கூடாது. மேலும், மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும்  உக்கடம், சத்தி சாலை, போத்தனூர் அறுவை மனைகள்  மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி திருவள்ளுவர் தினத்தில்  இறைச்சி விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு, ஜன. 12- மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு  சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்தது. ஈரோடு, கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மாதேஷ் (38). இவரது மனைவி  ஜோதிமணி (35) தனியார் மருத்துவமனையில் செவிலிய ராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மாதேஷின் மதுப்பழக்கத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனையால்  ஜோதி மணி வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து மலையம்பாளையம் காவல் துறையினர்   வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு  மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாதேஷ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம்  விதித்து உத்தரவிட்டார்.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்தி, பணம் பறிப்பு

உதகை, ஜன.12- உதகையில் ரியல் எஸ்டேட் அதிபர்களை  கடத்தி, தாக்கி 20 பவுன் நகை, ரூ.5 லட்சம்  பறித்த வழக்கில், மேலும் 2 கைது செய்யப் பட்டுள்ளனர். கோவை மாவட்டம், சிறுமுகையை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (53). ரியல் எஸ் டேட் அதிபரான இவர் தனது நண்பர்களும்,  ரியல் எஸ்டேட் அதிபர்களுமான பொள் ளாச்சியை சேர்ந்த ஜாபர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த மாதவன்  ஆகியோருடன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி  மாவட்டம், உதகையில் ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக இடங்கள் உள்ளதா? என்று பார்ப்பதற்காக உதகை வர முடிவு  செய்தனர். இதுதொடர்பாக கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (25),  தர்மராஜ் (25) உட்பட 6 பேர் அந்தோணி தாசுக்கு அறிமுகம் ஆகினர். இந்நிலையில், திட்டமிட்டபடி அந்தோணிதாஸ் உட்பட 3 பேரும் உதகைக்கு வந்தனர். அப்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களை சுற்றி  காட்டுவதாக கூறி 3 பேரையும் குண சேகரன் உள்ளிட்டோர் இடுஹட்டி அடுத்த கனக்கொம்பை பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  2 நாட்கள் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.  இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த கார், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அவர்களை விட்டு விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதகை ஊரக  காவல் துணை கண்காணிப்பாளர் விஜய லட்சுமி உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடசோலையைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தர்மராஜை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை கைது செய்ய தனிப்படை யினர் கோவை மாவட்டம் வந்தனர். இதில், கடசோலையைச் சேர்ந்த  அலெக்சாண்டர் (35), முரளி கிருஷ்ணன் (41) ஆகிய 2 பேரை  கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை வஉசி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி இன்று முதல் ஜன.21 ஆம் தேதி வரை நடக்கிறது

கோவை, ஜன.12- “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக் கோடி தமிழனின் கனவுகளைத் தாங்கி” என்ற  தலைப்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில்  அரசின் புகைப்படக் கண்காட்சி ஜன.13  (இன்று) முதல் ஜன.21 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசின் துறைகளை ஒருங்கிணைத்து “ஓயா உழைப் பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு  கலைநிகழ்ச்சிகள் ஜன.13 ஆம் தேதி (இன்று)  முதல் ஜன.21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் இதனை மாலை 4 மணி  முதல் இரவு 9 மணி வரை வரை பொதுமக்கள்  பார்வையிடலாம். இப்புகைப்படக் கண் காட்சியில் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், மக்களைத் தேடி மருத்துவ திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், காலை  உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம்,  இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன்,  கல்லூரி கனவு, புதுமைப் பெண் திட்டம், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன. புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாள் களில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை  சார்பில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி களும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஒயிலாட்டம், தப் பாட்டம், கிராமிய நிகழ்ச்சிகளும் நடை பெறும். மகளிர் திட்டம், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சாலையோர உணவகம் போன்ற அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல் சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக் கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் சமத்துவ பொங்கல் விழாவும் நடை பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வேட்டி சேலை தட்டுப்பாடு பொதுமக்களுக்கு ஏமாற்றம்

அவிநாசி,ஜன.12- அவிநாசியில் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் அரசு  வழங்கும் பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை  இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழ்நாடு அரசு  பொங்கல் பண்டிகைக்கு, இலவச வேட்டி  சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம், கரும்பு, அரிசி, சர்க்கரை  உட்பட அனைத்தும் குடும்ப அட்டைதாரருக்கு வழங்க உத்தர விட்டுள்ளது. இதில் அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட் சிகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் நியாய விலை கடைகள் பகுதி நேரமாகவும் , பல இடங்களில் முழு நேர செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வேலாயு தம்பாளையம், தெக்கலூர், கருவலூர் உள்ளிட்ட பல கிராமப்  பகுதிகளில் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்கா மல் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.  இதுகுறித்து ஒரு சில இடங்களில் நியாய விலை கடை  ஊழியர்கள்  கூறுகையில், குடும்ப அட்டை ஏற்ப வேட்டி சேலை, கிடைக்கவில்லை, உள்ள வேட்டி சேலைகள் கொடுத் தால் மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை  வழங்க முடியாது. இதன் காரணமாகவே பல இடங்களில்  வேட்டி சேலை கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வருடம் தோறும்  தமிழக அரசாங்கம் வேட்டி சேலை கொடுப்பது வழக்கம்,  இந்த வருடம் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து குடும்ப அட்டைதா ரருக்கும் வேட்டி சேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

275 பயனாளிகளுக்கு ரூ.28.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 

அவிநாசி, ஜன.12- அவிநாசி அருகே கானூர்புதூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 275 பயனாளிகளுக்கு ரூ.28.68 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அவிநாசி அருகே கானூர்புதூரில், மாவட்ட நிர்வாகம் சார் பில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமிற்கு, ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். முதி யோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகையும், ஆதர வற்ற விதவை உதவித் தொகை, சிறு, குறு விவசாய சான்று,  வேளாண் உபகரணங்கள், நத்தம் பட்டா மாறுதலுக்கான சான்று, குடும்ப அட்டை, சிறு தொழில் செய்ய கடனுதவி,  மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், கைப்பேசி  என 275 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சார் ஆட்சி யர் ஸ்ரவன் ஜெய்நாரயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், சமூக பாதுகாப்புத்திட்ட தணித் துனை ஆட்சியர் அம்பாயிரநாதன், பிற்படுத்தப்பட்டோர் நல  அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராஜ், திட்ட (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) மரகதம், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) விஜய குமார், ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

தாராபுரம், ஜன.12- தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் இருசக் கர வாகனம் திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்த னர். குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குள்ளாய்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி (26) தேங்காய் பறிக்கும் தொழி லாளியான இவர் கடந்த 8 ஆம் தேதி குள்ளாய்பாளையம் விநா யகர் கோயில் அருகில் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து  பூபதி குண்டடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந் தனர். இந்நிலையில்,  குண்டடம் அடுத்துள்ள திருப்பூர் பிரிவு  காவல் சோதனைச்சாவடியில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசா ரணை நடத்தியதில் அவர்கள் ஊதியூர் தாளக்கரையை சேர்ந்த பிரகாஷ் (30), மகேந்திரன் (29) என்பதும் அவர்கள் குள்ளாய்பாளையத்தில் பூபதியின் பைக்கை திருடிச் சென் றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து திருட்டு போன பைக்கை பறிமுதல் செய்து நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மஞ்சப்பை, தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், ஜன. 12 – நெகிழி தடையை திறம்பட செயல்படுத் துதல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துதல் பணிகளில் திறம்பட ஈடுபடுதல் ஆகியோருக்கு மஞ்சப்பை மற் றும் பசுமை சாம்பியன் விருதுகள் தமிழக  அரசால் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக ளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப் படும் நெகிழியின் தடையை திறம்பட செயல் படுத்தி, பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற் றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற  பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள்,  3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக  வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசு  ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு  ஏற்படுத்த முழுமையாக அர்பணித்தவர்க ளுக்கும், அமைப்புகளுக்கும் தமிழ்நாடு அரசு, 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு  பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.  100 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன், 1லட்சம் ரூபாய் பரிசுத்தொகை யும் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலை மையிலான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தேர்வுக்குழு மூலம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3 நபர்கள், நிறுவனங்களை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும். விருது பெறத் தகுதியுடையவர்கள் விண் ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல் 15 தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், ஜன. 12 - திருப்பூர் மாவட்ட அரசு ஆதிதிராவி டர் நல தொடக்க, நடுநிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள நான்கு இடை நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ. 7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசி ரியர் பணி நியமனம் செய்யப்பட உள் ளது. இதில் சேர விரும்புவோர், வரும்  18ஆம் தேதி வரை நேரடியாகவோ அஞ் சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண் டும். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக முதல் தளம் அறை எண் 113இல்  உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலர் முகவ ரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விப ரங்களுக்கு 73388 01274 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் சார்நிலை கருவூலத்தில் முத்திரைத்தாள் தட்டுபாடு: வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு

தாராபுரம், ஜன. 12- தாராபுரம் சார்நிலை கருவூலத்தில்  முத்திரைத்தாள் வில்லை வினியோகம்  தட்டுப்பாடு காரணமாக வழக்கறி ஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிர மத்துக்கு உள்ளாகிறார்கள். தாராபுரத்தில் கூடுதல் மாவட்ட நீதி மன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள் ளிட்ட 4  நீதிமன்றங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த நீதிமன்றங்களில் செக் மோசடி வழக்கு, ஜீவனாம்சம் வழக்கு,  பாகப்பிரிவினை வழக்கு, சுவாதீனம்  வழக்கு, விவாகரத்து வழக்கு, சாலை விபத்து உட்பட விபத்துக்களில் பாதிக் கப்பட்டோர்  நிவாரணம் கோரி நீதிமன் றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். இந்த  வழக்குகளை தொடுக்க வழக்குக்கு தகுந்தாற் போல நீதிமன்ற முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். தாராபுரம் நீதிமன்றங்களுக்கு அருகில் உள்ள சார்நிலை கருவூலத்தில் முத் திரை தாள் வாங்க வேண்டும். ஆனால்  கருவூலத்தில் முத்திரைதாள் தேவைக் கேற்ப கிடைப்பதில்லை. கடந்த 3 ஆண் டுகளாக கருவூல அதிகாரிகள் தேவைக் கேற்ப அரசிடம் கோரி வாங்குவ தில்லை. இதனால் பொதுமக்கள் கடு மையாக பாதிப்பதோடு வெளிவட் டாரங்களில் அதிக கட்டணம் செலுத்தி வாங்கவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் தெரிவிக்கையில், தாராபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பல் வேறு வழக்குகளுக்காக பொதுமக்க ளின் மனுக்களை நீதிமன்றத்தில் பதிவு  செய்து வாதாடி வருகின்றனர். அவ் வாறு வாதாடுவதற்கு தேவையான நீதி மன்ற முத்திரைத்தாள் வாங்கி அதில்  வழக்கிற்கு ஏற்ப பணம் செலுத்தி விண் ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் வழக்கு நடைமுறைக்கு வரும். ஆனால் தாராபுரம் பகுதியில் செயல்படும் அரசு சார்நிலை கருவூலத்தில் நீதி மன்ற முத்திரைத்தாள் போதிய அளவு  கிடைப்பதில்லை. அதற்கு காரணம் கேட்டால் எங்களிடம் வினியோகம் இல்லை என்று கூறுகின்றனர். இந்த  கருவூலத்தில் வினியோகம் இல்லாத தால் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  கூடுதல் செலவு செய்து வாங்கி வேண்டி யுள்ளது. கூடுதல் கட்டணத்தை மனுதா ரர்களிடம் வசூலிக்க முடியாது. இத னால் வழக்கறிஞர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் வெளி வட்டாரங்களில் முத்திரை கட்டண வில்லை வாங்கும் போது இருமடங்கு  கட்டணங்களை செலுத்த வேண்டியுள் ளது. எனவே தாராபுரம் சார்நிலை கரு வூல அலுவலர்கள் மக்கள் சேவையை கருத்தில்கொண்டு முத்திரைத்தாள் கட்டண வில்லை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்.

ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஜன.12- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன் கிழமை நடைபெற்ற பருத்தி  ஏலத்தில் ரூ.59.11 லட்சத் துக்கு வர்த்தகம் நடைபெற் றது. இந்த வாரம் நடைபெற்ற  ஏலத்துக்கு 2276 பருத்தி மூட் டைகள் கொண்டு வரப்பட் டன. இதில், ஆர்.சி.எச்.ரகப்ப ருத்தி குவிண்டால் ரூ. 7,000  முதல் ரூ.8,666 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)ப்ப ருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.59.11லட்சத்துக்கு வர்த் தகம் நடைபெற்றது.'

பொங்கல் பரிசு பொருட்கள், இலவச வேட்டி, சேலை  உரிய அளவு வழங்க முதல்வருக்கு கோரிக்கை

திருப்பூர், ஜன. 12 - பொங்கல் பரிசுத்தொகுப்பில் பச்ச ரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகிய பொருட்களும், இலவச வேட்டி, சேலை யும் நியாயவிலை கடையில் உள்ள  மொத்த பயனாளிகளின் எண்ணிக் கைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கி றது. உரிய அளவு வழங்கி பிரச்சனை ஏற்படாமல் சரி செய்ய வேண்டும் என்று  தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கூட்டு றவு ஊழியர் சமேளனத்தின் துணைப்  பொதுச்செயலாளர் கௌதமன் வலியு றுத்திள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மே ளனம் (சிஐடியு) துணை பொதுச்செய லாளர் ப.கௌதமன் தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: ஜனவரி 9ஆம் தேதி முதல் 12 ஆம்  தேதி வரை நான்கு தினங்களுக்கு பொங் கல் பணமும் மற்றும் பொங்கலுக்கான சக்கரை, பச்சரிசி,  கரும்புகளும் வழங் கப்பட்டன. வழங்கப்பட்ட பொருள்க ளின் குறைவுகளை எப்படி சமாளிப் பது என்ற கேள்வி எழுகிறது. 1000 கார்டு களுக்கு வினியோகம் செய்யப்பட்ட தில் பச்சரிசி 25 கிலோ மற்றும் சர்க்கரை  25 கிலோ குறைவாகவும் மற்றும் கரும்பு  20 குறைவாகவும் உள்ளது.

ஆகவே முதல்வர் பரிசீலனை செய்து சேதாரக்  கழிவு வழங்க வேண்டும் என கேட்டுக்  கொண்டுள்ளார். இலவச வேட்டி, சேலை மேலும், பொது விநியோகத் திட்ட இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோருக்கு, கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் சார்பில் ப. கௌதமன் எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் வேட்டி, சேலை நியாய விலை கடைக ளுக்கு முழு ஒதுக்கீடு வராமல் குறை வாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  கடைகளுக்கும் 300 மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. ஆனால் ரசீது போடும் பிஓ  எஸ் எந்திரத்தில் இலவச வேட்டி சேலை முழுவதும் ஒதுக்கீடு வந்திருப்பதாக வரவு வைத்துள்ளனர். மேலும் மூன்று வருட காலமாக குறைவாக கொடுக்கப்பட்ட வேட்டி, சேலை விற் பனை எந்திரத்தில் முழு ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அதை இன்னும் நீக்கம்  செய்யப்படாமல் உள்ளது. மேலும் தற் போது மாநகராட்சி பகுதியில் உள்ள  அனைத்து கிராம நிர்வாக அலுவலர் மற் றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கடை விற்பனையாளர்களை மிரட்டி குறைவாக வழங்கிய வேட்டி, சேலை களை பயனாளிகளுக்கு வழங்கச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்ற னர். ஆகவே, அதிகாரிகள் உடனடியாக  தலையிட்டு இலவச வேட்டி, சேலை பற் றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜன. 12 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு - 2 சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்பட்டது. 34 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11ஆம்  தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வார காலம் கடைப்பிடிக் கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வியாழனன்று சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து செளடாம்பிகை கல்யாண மண்டபம் வரை நடத்தப் பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற் றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக போக்குவரத்து காவல் உதவி ஆணை யர் சுப்பராமன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி பேர ணியை துவக்கி வைத்தார். சாலை விதிகளை கடைபிடிப் பதால் விபத்துகளை தவிர்க்கலாம். 18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். காவல் ஆய்வாளர் பாண்டியராஜன், உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி பங்கேற்றனர். மாணவ செயலர்கள் பூபதி ராஜா, ராஜபிரபு, விக்னேஷ், அரவிந்தன் ஆகியோர் தலைமை யில் மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டு  பேரணியில் பங்கேற்றனர்.

ரூ.50 வாடகைக்கு, ரூ.1500 அபராதம் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் 

உதகை, ஜன.12- குன்னூரில் 50 ரூபாய் வாடகை சென்ற ஆட்டோ ஓட்டு நருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து  வேலைநிறுத்தம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலா நகரமான குன்னூரில் 800க்கும் மேற்பட்ட ஆட் டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்க ளாகவே போலீசார் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி உள்ளூர் வாகனங்களுக்கும் அதிகளவில் அபராதம் விதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குன்னூ ரிலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு 50 ரூபாய்க்கு சவாரி சென்ற முகமது பிலால் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு குன்னூர் நகர போக்குவரத்து ஆய்வாளர்  நோ பார்க்கிங் எனக்கூறி  ரூ.1500 அபராதம் விதித்தனர். இதனைக்கண்ட ஆட்டோ ஓட்டு நர் அதிர்ச்சியடைந்தார். ஆட்டோவை அதே இடத்தில நிறுத்தி  போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதேபோன்று குன்னூரில் பல ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இச்சம்ப வத்தை அறிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தையடுத்து போலீசாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மேல் குன்னூர், வெலிங்டன் காவல் ஆய்வாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இனி இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து  ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்தில் உடல் கருகி இளம்பெண் பலி

கோவை, ஜன.12- கோவையில் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்தபோது, எதிர்பாராதவிதமாக உடல் கருகி இளம்பெண் பரிதாபமாக உயிரி ழந்தார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளை யத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள்  ரம்யா (31). இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரம்யாவின் ஆடையில் தீ  பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவ ரது உடல் முழுவதும் தீ பரவியது. இதை யடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  மீட்டு, கோவில்பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். இதன்பின் கோவை அரசு மருத்துவம னையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகை: 3 விஞ்ஞானிகள் பணியிட மாற்றம்

உதகை, ஜன.12- உதகையிலுள்ள மத்திய மண் வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி  மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் 3 விஞ் ஞானிகள் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்கு சொந்த மான 234 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. இதில்  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத் திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகி றது. இந்த அலுவலகம் வனத்துறைக்கு சொந் தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது. மத்திய மண் மற்றும் நீர்  வள ஆராய்ச்சி மையம் பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த  370 மரங்கள் அகற்றப்பட்டது. அதுமட்டு மின்றி காப்புக்காடு பகுதியில் இருந்த மற்ற மரங்களையும் அனுமதியின்றி வெட்டப் பட்டுள்ளது. இதில், வனத்துறை அதிகாரி களும், மத்திய மண் மற்றும் நீர்வளஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலரும், தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரும் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், வனத்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில், 48 லட்சம் ரூபாய் மதிப் புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மதிப் பிடப்பட்டது. இதுதொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரேஞ்சர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை  தடுப்பு காவலர் தேவேந்திரன், தற்காலிக தோட்ட பராமரிப்பாளர் நாகராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மையத்தின் தலைமை அலுவலகமான டேரா டூனில் தனியாக விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், உதகை மையத்தின் தலை வராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்திற்கும், விஞ்ஞானி மணிவண்ணன் அசாமிற்கும், மற்றொரு விஞ் ஞானி ராஜா ஒடிசாவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கோவை, ஜன.12- மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை, 18 ஆண்டு சிறை தண்டனை, ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் முத்தையா என்பவரது மகன் தென்னையா (50). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று வியாழனன்று தென்னையாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறைதண்டனை, ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் சந்திரமோகன் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தொப்பையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்

தருமபுரி, ஜன.12- தருமபுரி அருகே உள்ள தொப்பை யாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோ சனை கூட்டம் வியாழனன்று பொதுப் பணித்துறை அலுவலகத்தில் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள தொப்பையாறு அணைக்கு சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அணை யில் 298 மில்லியன் கன அடி நீர் உள் ளது. இதில் வலதுபுற கால்வாய் 17.85 கிலோமீட்டரும், இடதுபுற கால்வாய் 24  கிலோ மீட்டரும் உள்ளது. ஆணையின் பாசன பரப்பளவு 5330 ஏக்கராகும். இந் நிலையில், தொப்பையாறு அணைலி ருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் உதவி பொறியாளர் மோகன பிரியா, வலதுபுற கால்வாய் பாசன விவ சாயிகள் சங்கத்தை சேர்ந்த  நாசர், மல்ல முத்து, இயக்குநர்கள் வடிவேல், ராஜேந் திரன், தனபால், ரங்கநாதன் மற்றும் விவ சாயிகள் மா.தங்கம், முருகன், மசியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறை வார்டன்  2 பேர் கைது

சேலம், ஜன.12-  சேலம் அழகாபுரம் பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஓரிரு நாட்க ளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைச்சாலை முன்பு நின்று  கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற சேலம் மாநகர போலீசார், சந்தேகத்தின் பெயரில் அப் பெண்ணிடம்  விசாரணை மேற் கொண்டனர். அப்போது, சிறை யில் பணியாற்றும் வார்டன்  ஒருவர் தன்னை காதலிப்பதா கவும் அவருக்காக காத்திருப் பதாகவும் தெரிவித்ததோடு,  இரண்டு வார்டன்கள் தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, தவறாக நடந்து கொண்டதாகவும் தெரி வித்துள்ளார். அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீசார், சிறை வார்டன்கள் அருண் மற்றும் சிவசங்கர் ஆகியோரை கைது  செய்து சிறையில் அடைத்த னர்.

நண்பனுக்காக திருடிய இளைஞர்கள் கைது

சூலூர், ஜன.12- சூலூரில் கஞ்சா போதையில் இ-பைக் (மின்சார இரு சக்கர வாகனம்) ஓட்ட வேண்டும் என ஆசைப்பட்ட நண்பனின் கனவை நிறைவேற்ற கத்தியை காட்டி வடமாநில நபரிடம் வாக னத்தை திருடி சென்ற 3 இளைஞர்களை ஜிபிஎஸ் உதவி யுடன் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சோமனூர், காமாட்சிபாளையம் அருகே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேந்தரா என்பவர் சம்பவத்தன்று தனது இ-பைக் (மின்சார இருசக்கர வாக னம்) சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாக னத்தில் 3 இளைஞர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ள னர். ஒரு கட்டத்தில் சுரேந்தரை வழி மறித்து, அந்த மூவரும் இ-பைக்கை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு சுரேந் தர் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த மூவரில் ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி சுரேந்தரிடம் இருந்து இ-பைக்கை பறித்து கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினர். இதுகுறித்து சுரேந்தர் கரு மத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற் கொண்டனர். மேலும், இ-பைக்கில் இருந்த ஜிபிஎஸ் (GPS) சிக்னல் மற்றும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் அந்த வாலிபர்களை தேடி வந் தனர். இந்நிலையில், இ-பைக்கில் இருந்த ஜிபிஎஸ் சிக் னலை கொண்டு திருவாரூர் பகுதியில் பதுங்கியிருந்த ஆகாஷ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன், மயிலாடுதுறை யைச் சேர்ந்த குணசேகர் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்ட தாக ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஆகாஷ் இ-பைக் ஓட்ட வேண்டும் என ஆசைப்பட்டதால், கஞ்சா போதையில் தமிழ்வாணன், குணசேகர் முன்னே சென்று கொண்டிருந்த இ-பைக் நிறுத்தி திருடியதாகவும், அதுபோக 2 செல் போனை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பின் மற்ற இருவரையும் (தமிழ்வாணன், குண சேகர்) கைது செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் திருடி வைத்திருந்த செல்போன்கள் மற்றும் இ-பைக்கை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.