சேலம், ஜூன் 24- போதைக்கு எதிராக மற்றும் டெங்கு நோயாளிகளை காக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சேலம் வடக்கு மாநகர் சாமிநாதபுரம் பகு தியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பாரதியார் ஆட்டோ ஸ்டாண்ட் சார் பில் சாமிநாதபுரம் பகுதியில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, வாலி பர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் ஆர்.குரு பிரசன்னா தலைமை தாங்கினார். பள்ளப் பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் துவக்கி வைத்தார். முன்னாள் மாநில துணைச் செயலாளர் என்.பிரவீன்குமார் முதல் கொடையாளராக இரத்தம் கொடுத்தார். இதில், மாவட்டச் செயலாளர் வி.பெரியசாமி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து மனை இரத்தவங்கி அலுவலர் மரு.ரவீந்தி ரன், திமுக கோட்டச் செயலாளர் கே.முரு கன், மாவட்டப் பொருளாளர் எம்.வெற்றி வேல், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி. வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்றனர். இம்முகாமில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 62பேர் இரத்த தானம் செய்தனர். கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் ஒன் றிய தொப்பம்பட்டியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், ஒன்றி யச் செயலாளர் எம்.மோகன்ராஜ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ந.ராஜா, குருடம் பாளையம் ஊராட்சி தலைவர் டி.ரவி, மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.