நாமக்கல், நவ.14- பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மற் றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆணி படுக்கையின் மீது அமர்ந்து 50 யோகா சனம் செய்து மாணவி ஒருவர் உலக சாதனை படைத்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்ஆர்வி பப்ளிக் பள்ளியில் வியாழனன்று நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் நடைபெற் றது. அதில் அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக் கும் மாணவி ஜே.ஜே.ரிடிஷா என்பவர், ஆணி படுக்கையின் மீது அமர்ந்து 50 யோகா சனங்களை 20 நிமிடத்தில் செய்து உலக சாதனை படைத்தார். நோபல் வேர்ல்ட் ரெக் கார்ட்டின் இயக்குநர் ஹேமலதா மற்றும் எஸ் ஆர்வி குழுமத்தின் செயலாளர் மனோகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவருடைய சாதனையை பாராட்டி, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றி தழும், பதக்கமும் வழங்கி பெருமைப் படுத்தப்பட்டது. உலக சாதனை படைத்த மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாணவி கூறுகையில், கடந்த முறை பெண்களின் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக மற்றும் பெண்கள் பாது காப்பை வலியுறுத்தி, தேங்காயின் மீது அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தேன். தற்போது இரும்பு ஆணிகள் மீது அமர்ந்து 50 யோகாசனங்களை 20 நிமிடத்தில் செய்து உலக சாதனை படைத் துள்ளேன். பெண்களின் பாதுகாப்பை வலியு றுத்தி தொடர்ந்து பல்வேறு உலக சாதனை களை படைப்பேன், என்றார்.