districts

img

சிபிஎம் பல்லடம் ஒன்றியச் செயலாளராக வை.பழனிச்சாமி தேர்வு

திருப்பூர், அக்.14- சிபிஎம் பல்லடம் ஒன்றிய  செயலாளராக வை.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய 11  ஆவது மாநாடு, 63.வேலம் பாளையம் தோழர் என்.சங்க ரய்யா நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மூத்த தோழர் எஸ்.காஜா செங்கொடியை ஏற்றி வைத்தார். எஸ். மனோகரன் வரவேற்றார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம் அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஜெயபால் வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், பல்லடம் ஒன்றிய மேற்குப்பகுதி ஊராட்சிகளில் நிலவும் கடும்  வறட்சியைப் போக்க, சூலூர் குளத்தி லிருந்து உபரி நீரை, இந்த வட்டார குளம், குட்டைகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்க  வேண்டும். பல்லடம் பேருந்து நிலையம்  எதிரில் உள்ள அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும். பல்ல டம், மங்கலம், அவிநாசி வழித் தடத்தில் கூடுதல் புறநகரப் பேருந்துகள் இயக்க வேண் டும். விசைத்தறித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரிய குளறுபடிகளை போக்கி தொழி லாளர் பணப் பயன்கள் பெறுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளராக வை.பழனிச்சாமி மற்றும் 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசினார். வர வேற்புக்குழு நிர்வாகி தங்கவேல் நன்றி கூறி னார்.