districts

img

புழுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் புகும் அவலம்

கோபி, ஜூன் 26- வடிகால் வசதி இல்லாததால் தேங் கிய கழிவுகளில் புழுக்கள் உற்பத்தி யாகி வீட்டினுள் புகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடுமாவட்டம் கோபி அருகே  உள்ள நஞ்சைகோபி ஊராட்சிக்குட் பட்ட குழவிகரடு பகுதியில் 200க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  இங்குள்ள சாக்கடை கழிவுநீர் வெளியே றும் வகையில் இல்லாததால் கழிவுநீர் மாத கணக்கில் சாக்கடையிலேயே தேங்குகிறது. கொசு உற்பத்தி அதிகமா கியும் தூர்நாற்றம் வீசி வந்துள்ளது. இது குறித்து நஞ்சைகோபி ஊராட்சி மன்றத்  தலைவரிடம் இப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். இருப் பினும், தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை வெளியேற்றவும் தூய்மை செய்ய வும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், தற்போது சாக்கடை யில் தூர்நாற்றத்துடன் புழுக்கள் உற் பத்தியாகி வீடுகளை நோக்கி படையெ டுத்துள்ளது.  இதன்காரணமாக இப்பகுதி மக்கள் பலரும்  நோய்தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்க ளால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், கடந்த பல மாதங்களாக  சாக் கடை கழிவுநீர் தேங்கி வருவதாகவும் சாக்கடை கழிவுநீரை வெறியேற்ற பல முறை தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பட்டியலின மக்களின் சாக் கடை கழிவுநீரை வெளியேற்றும் எல் லைகளில் உள்ள குடியிருப்பு வாசிகள்,  தங்களது பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீரை எவ்வாறு அனுமதிப்பது என இருபுற எல்லையில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாத  கணக்கில் தேங்கிய சாக்கடை கழிவுநீ ரில் புழு உற்பத்தியாகி உள்ளது. இது தற் போது வீடுகளுக்குள்ளே இந்த புழுக் கள் வந்து விடுகிறது. எனவே குழவிகரடு  பட்டியலின மக்கள் குடியிருக்கும் குடியி ருப்புகளில் பல மாதங்களாக தேங்கி யுள்ள சாக்கடை கழிவுநீரை வெளி யேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.