கோவை மாநகராட்சி, 80 ஆவது வார்டு பகுதியிலுள்ள, உலக தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்கா, பராமரிப்பின்றி இருந்து வந்தது. இந்நிலையில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் திறந்து வைத்தார்.