districts

img

ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு பணி செய்வதை ஏற்க முடியாது

ஈரோடு, ஜூன் 10- ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்வதை ஏற்க  முடியாது எனக்கூறி, நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சுங்கச்சாவடி அமைத்து தனியார் சுங்கவரி வசூலிக்க அனுமதிக்கக்கூடாது. கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பரா மரிப்பு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு பணி  மேற்கொள்வதன் மூலம் இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை பறிப்பதை  அனுமதிக்க முடியாது. சாலைப்பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும். கடந்த  15 ஆண்டு காலமாக முறைகேட்டுடன் முதுநிலைப்பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கி வருவது விதிமீற லாகும். இத்தகைய விதிமீறலில் ஈடு பட்டு வரும் முதன்மை இயக்குநர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாடு சார்நிலை பணியமைப்புச் சட்டப் படி சாலைப்பணியாளர்களின் முது நிலைப் பட்டியலை முறைப்படுத்தி வெளியிட அனைத்து கோட்டப் பொறி யாளர்களுக்கும் ஆணை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திங்க ளன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர்  எம்.ஆர்.செங்கோட்டையன் தலைமை  வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோக ரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றினார். சங்கத்தின் கோட்டச் செயலாளர் சு.ராஜேந்திரன் கோரிக்கை களை விளக்கி பேசினார். கோபி கோட்டச்  செயலாளர் ர.கருப்புசாமி வாழ்த்தி  பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் து.சிங்கரா யன் நிறைவுரையாற்றினார். கோட்டப் பொருளாளர் பி.பாபு நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட் டப் பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற கருப்புப்கொடி ஆர்ப்பாட் டத்திற்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின்  கோட்டத் தலைவர் எம்.வெற்றிவேல்  தலைமை வகித்தார். கோட்ட துணைத் தலைவர்கள் கே.வெள்ளியங்கிரி, எம்.வீரமுத்து, இணைச்செயலாளர்கள் எம். சான்பாட்ஷா, கே.இடும்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி கோட்டச் செயலாளர் எஸ்.ஜெகநாதன், பொள்ளாச்சி வட்டக் கிளைச் செயலாளர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். முடி வில், கோட்டப் பொருளாளர் வி.சின்ன  மாரிமுத்து நன்றி கூறினார்.