districts

img

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க கோரி திருப்பூரில் வேலை நிறுத்த போராட்டம்

திருப்பூர், டிச.12- கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க, தமிழ்நாடு அரசு  கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கட்டிட கட்டுமான துறையைச் சேர்ந்த சங்கங்கள் வியாழ னன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரஷர் உரிமையாளர்கள் கட்டு மானப் பணிகளுக்கு முக்கிய மூலப்பொ ருளான எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும்  ஜல்லிக்கற்கள் விலையை உயர்த்தி யுள்ளதால், கட்டுமானத் தொழில் கடுமை யாக பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக தமிழ் நாடு அரசு தலையிட்டு கிரஷர் உரிமை யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி  விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட கட்டுமான  துறையைச் சேர்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டிட கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் முன்வர வேண்டும். இதன் மீது தமிழக  அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வியாழனன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்தில், அகில இந்திய  கட்டுனர் சங்கம், திருப்பூர் சிவில் இன்ஜி னியர்ஸ் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்கம், திருப்பூர் ரெடிமிக்ஸ் கான்கிரீட்  அசோசியேசன்,  தமிழ்நாடு மணல் லாரி  உரிமையாளர்கள் சம்மேளனம்,  தமிழ் நாடு பிளை ஆஷ் அன்ட் பிளக்ஸ் மேனு பேக்சர்ஸ் அசோசியேஷன், திருப்பூர்  மாவட்டம் ஹாலோ பிளாக் உற்பத்தியா ளர்கள் சங்கம், திருப்பூர் மாநகராட்சி ஒப் பந்ததாரர்கள் சங்கம், ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கட்டுமானப் பணிகளை புறக்கணித்து  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டனர்.