districts

img

வெள்ளப்பெருக்கால் தடைப்பட்டிருந்த உயர்மட்ட மேம்பாலப் பணி மீண்டும் தொடக்கம்

மேட்டுப்பாளையம், மார்ச் 1- மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் நீர்மட்டம் குறைந்ததையொட்டி லிங்காபுரம் காந்த வயல் இடையே தடைபட்டிருந்த உயர்மட்ட பாலப் பணி மீண்டும் தொடங்கி உள்ளதால்  இப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே சிறுமுகை பேரூ ராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்த வயல், காந்தையூர், மேலூர் ஆலூர், உலியூர் உள்ளிட்ட பழங் குடியின கிராமங்கள் உள்ளன.  இக்கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், இப்பகுதிகளையொட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்த மான விவசாய நிலங்கள் மட்டு மல்லாமல் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன.  இக்கிராமங்கள் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக ளில் உள்ளன. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி யுள்ள நீலகிரி, கேரளா ஆகிய பகு திகளில் பெய்து வரும் மழை நீர்  பவானிசாகர் அணையில் தேங்கும்.  இது போன்ற காலங்களில் லிங்கா புரம் - காந்தவயல் இடையே உள்ள  பாலம் தண்ணீரில் மூழ்கி தரை வழி  போக்குவரத்திற்கு தடை ஏற்படும்.  இக்காலத்தில் பரிசல் மற்றும் மின்  மோட்டார்கள் மூலம் பொதுமக்கள்  சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதிகளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  அதிகரிக்கும் பொழுது இப்பகுதி யில் தேங்கும் தண்ணீரால் போக்கு வரத்து பாதிக்காமல் இருக்க லிங்காபுரம் காந்த வயல் இடையே தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பாக ரூ.15.40 கோடியே மதிப் பீட்டிலான உயர்மட்ட பாலப் பணி கள் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்ந்த காரணத்தினால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பவானி சாகர் அணை நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் மீண்டும் உயர் மட்ட பாலப் பணிகள் வெள்ளியன்று  துவங்கப்பட்டது. மீண்டும் நீர்த்தேக் கம் நிறைவதற்குள் பணிகளை  முடிக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனி டையே அடுத்த வாரத்தில் அதிகப் படியான பணியாட்கள் வரவழைக் கப்பட்டு பணிகள் துரிதமாக நடை பெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.