districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

கரூர், ஏப்.28-கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர்கள் கே.நடராஜன், எஸ்.நாகராஜன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் டிஎன்பிஎல் கட்சி கிளைகளின் சார்பில் புகளூரில் பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் கரூர் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பூரணம் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளருமான கனகராஜ், கட்சி நிதியாக ரூபாய் 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்ஷா, ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினர் ராமசுப்பு ஆகியோர் பேசினர். நிறைவாக நாகராஜன், நடராஜன் ஆகியோர் நன்றி கூறினர்.

;