குமரமங்கலம் ஊராட்சி, இந்திரா நகரில் சமூக விரோதிகள் நூறாண்டு காலமாக இருந்த பனை, வேம்பு உள்ளிட்ட மரங்களை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் அறுத்து, லாரிகள் மூலம் மூலம் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, சிபிஎம் குமாரமங்கலம் கிளையின் மூத்த தோழர் சுந்தரம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் வருவாய் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.