சேலம், நவ. 26 - பெண்கள் இடதுசாரிகளாக இருப்பது நல்லது என சேலத் தில் நடைபெற்ற புத்தகத்திரு விழாவில் கவிஞர் யுகபாரதி பேசினார். அரசு சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத்திருவி ழாவின் ஐந்தாம் நாளில் “அறமும் அகமும்” என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதி சிறப்புரையாற்றினார். அதில் தனக்குப் பிடித்த மாவட்ட மாக சேலம் இன்று வரை இருக்கி றது. தமிழ் மொழியின் தலைசிறந்த சொல் என்றால் அறம். அறம் என்பது தமிழ் மக்களின் மரபு வழி வந்தது. படிப்பு ஒருவரை சமூ கத்தின் அடித்தளத்தில் இருந்து மேல்நிலைக்கும், மேல் நிலையில் இருப்பவருக்கும் சமநிலையில் கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்கும் என தெரிவித்தார். சங்க இலக்கியத்தில் பல கருத் துள்ள பாடல்கள் உள்ளன. அவற்றை தழுவியே பழைய பாடல் ஒன்றான “ நாம் ஒருவரை ஒரு வர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னால் என் இடது கண் துடி துடித்தது “ என்று ஒரு பாடல் வரியில் கதாநாயகி இடது கண் துடிப்பதாக எழுதியுள்ளார். ஏன் வலது கண் குறித்து குறிப்பி டவில்லை? அதற்கான காரணம் சங்க இலக்கியத்தில் கூறப்பட் டுள்ளது. வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்று அர்த்தம். எனவே பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லது என்றும், இடது சாரிகளாக இருப்பது இன்னும் நல்லது என்றும் குறிப்பிட்டார். சங்க இலக்கியங்களை படிக்க நேரமில்லை என்றாலும் திருக் குறளை யாவது படித்திட வேண் டும். இன்றைய தலைமுறை மாணவர்கள் அதிக அளவில் படிக் கிறார்கள். இன்னும் அதிகமாக படித்து, புதிய புதிய கவிதைகளும் பாடல்களும் அறம் சார்ந்து படைத் திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.