districts

img

குடிநீர் கேட்டு அடுத்தடுத்து பெண்கள் மறியல்

தருமபுரி, ஜூன் 9- தருமபுரி அருகே கிராம மக்கள்  குடிநீர் கேட்டு இருவேறு இடங் களில் பெண்கள் அடுத்தடுத்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற் பட்டது.  தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ஊராட்சிக்குபட்ட பெரி யாம்பட்டி சமத்துவபுரம். இப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. இங்குள் ளவர்கள் கூலி வேலை செய்து வரு கின்றனர். இப்பகுதியில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து  ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாக சரியாக குடிநீர்  வருவதில்லை. இதனால் இப்பகுதி  மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசம டைந்த கிராம மக்கள் வெள்ளி யன்று சமத்துவபுரம் எதிரே  உள்ள  தருமபுரி-காரிமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதையறிந்த வட்டாட்சியர் சுகு மார், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வி ஆகியோர் சம்பவ  இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது ஒகே னக்கல் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.

இதேபோல் காரிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராமன் கொட் டாய், பூதாளன்கொட்டாய், குப்பன் கொட்டாய், எம்ஜிஆர் நகர், பெரி யாம்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஒகேனக்கல்  குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதனால் மக்கள், ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய் விலைக்கு வாங்குகின்றனர். மேலும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் ஏரிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரு கின்றனர். இதே பகுதியில் போர் வெல் அடிபம்பு ஒன்று உள்ளது. இது பழுதடைந்து நீண்ட நாளா கிறது.  ஒகேனக்கல் குடிநீர் கிடைக் கவும், பழுதடைந்த போர்வெல்லை  சரிசெய்ய கோரி ஊராட்சி மன்ற  தலைவரிடம் முறையிட்டும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள்  காலிக்குடங்களுடன் பெரியாம் பட்டியில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துணை வட்டார  வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ்,  கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தினார். இதில் போர்வெல் அடி பம்பை சரி செய்யவும், ஒகே னக்கல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து, கிராம மக்கள் மறி யலை கைவிட்டனர். ஒரே ஊராட்சி யில் குடிநீருக்காக  இரு பகுதிகளில்  மறியல் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.