districts

சேலம்: வரதட்சனை கேட்டு கொடுமை

சேலம், டிச. 11- வரதட்சணை கேட்டு கொடுமைப்ப டுத்திய கணவரை கைது செய்யக்கோரி  பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண்  ஆட்சி யர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடு பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த வர் விஷ்ணுபிரியா  என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், சங்ககிரியை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பவ ருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவன்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் விஷ்ணுபிரியாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடு மைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர  காவல் ஆணையாளர் அலுவல கத்திற்கு வந்த விஷ்ணுபிரியா, காவல் ஆணையாளர் விஜயகுமா ரியிடம் கண்ணீர் மல்க ஒரு புகார் அளித் தார். அப்போது, தனக்கு நடந்த கொடுமையை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து புகார் குறித்து விசாரணை நடத்த அம்மாப் பேட்டை அனைத்து மகளிர் போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அம்மாபேட்டை காவல் துறையினர் இது குறித்து தீவிர  விசாரணை நடத்தி  விஷ்ணுபிரியாவின், கணவர் கார்த்திகேயன், மாமியார் உதயநித்யா, மாமனார் வெள்ளியங்கிரி, நாத்த னார் கார்த்திகா ஆகிய 4 பேர்  மீது வரதட்சனை கேட்டு கொடுமைப்ப டுத்தியதாக வழக்கு பதிவு செய்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கணவரை கைது செய்யக்கோரி விஷ்ணுபிரியாவும், அவரது குடும்பத்தினரும் திங்க ளன்று, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, அங்கிருந்த போலீசார் அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, விஷ்ணுபிரியா திடீ ரென மயக்கம் அடைந்தார். பின்னர்  அவரை காவல்துறை மீட்டு சிகிச்சைக் காக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.