தருமபுரி, ஆக.8- பாப்பிசெட்டிப்பட்டியில், குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாப்பி செட்டிப்பட்டி கிராமத்தில், சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. குடிநீர் பற் றாக்குறையால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல் வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் வியாழ னன்று, அரூர் - தருமபுரி செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, கலைச்செல்வி மற்றும் காவல் துறையினர் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது, தண்ணீர் பிரச் சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில், போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.