சேலம், பிப்.19- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொந்த வீட்டை அபகரிக்க, தனது கணவரின் முதல் மனைவியின் மகன், 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (50). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது கணவரின் முதல் மனைவியின் மகன் மனோஜ் பிரபாகரன் என்பவர், கடந்த பிப்.15 ஆம் தேதியன்று 20க்கும் மேற்பட்ட அடியாட்களை அழைத்து வந்து கட்டை, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி னர். இந்த தாக்குதலில் எனது தங்கை உடல்நலம் பாதிக்கப் பட்டு, வாழப்பாடி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வீட்டை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது உயி ருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றார்.