districts

img

திருமுருகன் பூண்டி நகராட்சியின் அவலம் - மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

தேவையான அலுவ லர்களை உடனே நியமிக்க கோரி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அருகாமையில் திருமு ருகன்பூண்டி நகராட்சி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில், அன்றைய திமுக  தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது. திருமுருகன்பூண்டியில்  தொல்லி யல் துறை கட்டுப்பாட்டில்  பழமையான முருகன் கோயில் உள்ளது. இப்பகுதியில் சிற்பக் கலைக்கூடம், பனியன்  தொழிற்சாலைகள் பெரிய அளவில் செயல்படுகின்றது.  பேரூராட்சியாக இருந்தபோது 15 வார்டுகளும், நகராட் சியாக தரம் உயர்த்திய நிலையில் 27 வார்டுகளாக மாற்றி  அமைக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நகர மன்ற தேர்த லும் அறிவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், பல பிரிவுகளுக்கு அதிகா ரிகள் நியமிக்கப்படவில்லை.

அதேபோல, தபால் அலுவல கத்திற்கு சொந்த கட்டிடமில்லை, ஆரம்ப சுகாதார நிலை யத்தை பொது மருத்துவமனையாக மாற்ற முடியாமல்  திணறி வருகிறது. பொதுமக்கள் வசதிக்கேற்ப நகர மன்ற அலுவலகத்தை பூண்டி பேருந்து நிறுத்தம் அருகிலேயே செயல்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி வந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் தானடித்த மூப்பாக, பொதுமக்கள் சென்றுவர பொருத்தம் இல்லாத இடத்திற்கு அலுவலகத்தை மாற்றுகிறது. மேலும், பேரூராட்சியாக  இருந் தபோது அமைக்கப்பட்ட சாலைகள், மின்விளக்குகள் அதே  நிலையில் தான் தொடர்கிறது. புதிய குடிநீர் இணைப்பு  வேண்டிய ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்த போதும், அதனை அலட்சிப்படுத்தி, புதிய குடிநீர் இணைப்பு  வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி யில், இந்த நகராட்சியில், பல்வேறு முறைகேடான குடிநீர்  இணைப்பு வழங்கப்பட்டதை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி  தொடர் போராட்டம் நடத்தியது. இந்த முறைகேடு நடை பெற்றது உண்மையென நிரூபித்து, திருமுருகன் பூண்டி நக ராட்சி நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தந் துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் முறையீட்டில், முறைகேடான  குடிநீர் இணைப்பு வழங்கிய நபர்கள் மீது நடுவர்மன்றத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடுவன் மன்றம் உத்தரவும்  வழங்கியது. இருப்பினும் நகராட்சி நிர்வாகமும் நடுவர் மன் றத்தின்  தீர்ப்பை மதிக்காமல் எந்த ஒரு நபர் மீதும் நடவ டிக்கை எடுக்கவில்லை. 

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி பகுதி கிளைகள் சார் பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்ஒருபகுதியாக புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில்,  திருமுருகன்பூண்டி நக ராட்சி தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடத்தை தாண்டி யுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான அலு வலர்களை இதுவரையில் நியமிக்கப்படவில்லை. உடன டியாக தேவைக்கேற்ப அலுவலர்களை நியமிக்க வேண்டும். புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, வரைபடம் போன்ற அனுமதிக்கு மக்களை அலை கழிக்கச்செய்யும் நடவடிக்கையை திருமுருகன் பூண்டி நக ராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

பொது சுகாதாரம், குடி நீர் விநியோகம், தெருவிளக்கு, வரி வசூல் போன்ற பணிக ளுக்கு தனியாருக்கு வழங்கும், அரசாணை 115, 152 உடன டியாக திரும்பபெற வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நகராட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைக்கப்பட்டது. திருமுருகன்பூண்டி  நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 வார்டு  நகர மன்ற  உறுப்பினர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 14 ஆவது வார்டுநகர மன்ற உறுப்பினர் தேவராஜன், 22 ஆவது வார்டு  நகரமன்ற  பார்வதி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செய லாளர் செ.முத்து கண்ணன் உரையாற்றினார். இந்தப் உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச் சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகனசுந்தரம், வேலுச்சாமி, பாலசுப்பிரம ணியம் உள்ளிட்டோர் பேசினார். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்த கோபால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து உரையாற்றி னார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.