ஈரோடு, ஜூலை 15- அம்மாபேட்டை அருகே பாலம் இல்லாததால் ஓடை நீரில் நீந்திய படி இறந்தவரின் உடலை கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட் டையை அடுத்த குறிச்சி, சமத்துவ புரம் அருகே மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுப்பராயன்கொட் டாய் பகுதியைச் சேர்ந்த 150 குடும்பத் தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்துக்கு செல்லும் வழி யில் சித்தார் ஓடை உள்ளது. இந்த ஓடையை கடந்து தான், அப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்க ளின் உடலை எடுத்து செல்ல வேண் டும். தற்போது இந்த ஓடையில் 8 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கி றது. இந்நிலையில், சுப்பராயன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரியான பெருமாள் (75) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அலங் கரிக்கப்பட்ட தேரில் உறவினர்கள் வைத்து அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு கொண்டு சென்ற னர். ஆனால் ஓடையில் 8 அடி ஆழத் துக்கு தண்ணீர் இருந்ததால், வாழை மரத்தை வெட்டி, அதை மூங்கிலில் கட்டி அதில் இறந்தவரின் உடலோடு வைக்கப்பட்டிருந்த தேரை வைத்து கயிரால் கட்டி மிதக்க விட்டனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் தண்ணீரில் நீந்தியபடி உடலை மறுக ரைக்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தார் ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடல் களை தண்ணீரில் நீந்தியபடி எடுத்து சென்று தான் புதைத்து வருகிறோம். எனவே, ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும். அல்லது அந்த பகுதியில் உள்ள ஓடை புறம் போக்கு பகுதியில் உள்ள இடத்தை ஒதுக்கி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதேபோன்று, பல்வேறு பகுதி களில் மயானத்திற்கு செல்ல உரிய பாதை கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின் றனர். மேலும், மாயன வசதி இல்லா மல் சாலையோரங்களிலும், ஆற்றங் கரையிலும் உடல்களை அடக்கம் செய்யும் நிலை தொடர்கிறது. ஒருவர் இறந்தபின்பும், அவரை நிம்மதியாக நல்லடக்கம் செய்ய முடியாத நிலையை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.