districts

img

மாற்று இடம் வழங்காமல் எளிய மக்கள் வீடுகளை இடிப்பதா?

கோவை, பிப்.22- சங்கனூர் கால்வாய் தடுப்புச் சுவர் கட்டும் பணிக்காக மாற்று இடம் வழங்காமல் மக்களின் துய ரத்தை உணராமல் வீடுகளை இடித்த மாநகராட்சியின் நடவடிக் கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண் டனம் தெரிவித்துள்ளார். இதுகு றித்து ஆட்சியர் மற்றும் ஆணை யரை நேரில் சந்தித்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  கோவை மாநகராட்சி, 68 ஆவது வார்டுக்குட்பட்ட சிவானந்தா காலனி மாசியம்மாள் லே அவுட்டில், சங்க னூர் கால்வாய் தடுப்பு சுவர் மற்றும் சாலைப் பணிகளுக்காக கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், அங்கு வசிக்கும் மக்க ளுக்கு மாற்று இடம் ஒதுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடித்தனர். இதனையடுத்து அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து பாதிக் கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் கவனத் திற்கு கொண்டு வந்தனர். இதைய டுத்து, மக்களுடன் இணைந்து பி. ஆர்.நடராஜன் எம்.பி., உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநக ராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து, வீடுகளை இடிப்பதை உட னடியாக நிறுத்த வேண்டும். தற் போது இடிக்கப்பட்ட ஆறு வீடுக ளுக்கும் மாற்று வீடு வழங்க வேண் டும். மேலும், சங்கனூர் கால்வாய் தடுப்புச்சுவர் மற்றும் சாலைப் பணி யினால், பாதிக்கப்படும் ஏழை, எளிய, உழைப்பாளி மக்களின் குடி யிருப்புகளுக்கு மாற்று வீடுகளும், நிவாரணமும் வழங்க வேண்டும், என்றார்.  இதனையேற்ற மாநகராட்சி ஆணையர், உடனடியாக வீடுகளை  இடிக்கும் பணியை நிறுத்தவும், சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரித்த பிறகுதான் மேல் நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தார். இதனை அதிகாரிகளிட மும் உடனடியாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ஆறு வீடுகளின் உரி மையாளர்களுக்கு உரிய நிவார ணத்தை தருவதாகவும் ஒப்புக் கொண்டார்.  முன்னதாக, ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை பி.ஆர்.நடராஜன் எம்.பி., சந்திக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், கிழக்கு நகரக்குழு செய லாளர் என்.செல்வராஜ் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.