districts

img

அப்பர் அமராவதி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேறுமா?

உடுமலை, டிச.18- அமராவதி அணைக்கு மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமிக்க முடியாத தால், கோடைக் காலங்களில் தண்ணீர் இல் லாமல் வறண்டு போகும் நிலையில் அமரா வதி அணை உள்ளது. இந்நிலையைப் போக்க அமராவதி அணைக்கு மேல் அப்பர்  அமராவதி நீர்த் தேக்க திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற் பொழுது எழுந்துள்ளது. அமராவதி அணை திட்டம். கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலை யில் உள்ள மூணாறு மலைப் பகுதியில் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை வனப்பகுதியில் அமராவதி ஆறு உற்பத்தியா கிறது. அமராவதி ஆறு காவிரியின் முக்கிய  உப நதிகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு உருவாகும் அமராவதி ஆற்றின் குறுக்கே  உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் 90 அடி உயரத்தில் சுமார் 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை அணை 1957 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதி  மொத்தம் 839 சதுர கிலோ மிட்டர். மொத்த  அணையில் 9.06 சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் திருப்பூர், கரூர் மற்றும்  ஈரோடு மாவட்டத்திற்கு புதிய பிரதான கால்வாய் மற்றும் ராமகுளம் கால்வாய் அணையின் ஒன்பது ஷட்டர்கள் மூலமாக  வெளியேறும் தண்ணீரால் 22 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறு கிறது. மேலும் பல கிரமங்கள் குடிநீர் வசதி  பெற முக்கிய பங்கு வகுக்கிறது.

அப்பர் அமராவதி திட்டம்:

அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள் ளிட்ட மூன்று ஆறுகள்  கூட்டாறு என்ற இடத் தில் இணைந்து அமராவதி ஆறாக மாறுகி றது. இந்த இடத்தில் இருந்து அணைக்குப் பய ணிக்கும்  இடைவெளியில் துவானம் என்ற  உயரமான இடத்தில் இருந்து கீழ் நோக்கி அரு வியாக மாறி மீண்டும் ஆறாகச் செல்கிறது. இப்படி துவானம் அருவியாக மாறும் இடத் தில் தான் மழைக் காலங்களில் தண்ணீ ரைச் சேமித்து வைக்க 600 ஏக்கர் பரப்பள வில் அப்பர் அமராவதி அணை என்ற பெயரில்  தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அணை கட்டுவதற்கான எந்த நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை அப்பர் அமராவதி அணையின் நன்மைகள்: அமராவதி அணைக்கு மேல் அப்பர் அமராவதி அணை கட்டுவதன் மூலம் வருடம்  தோறும் வீணாகக் கடலில் கலக்கும் ஐந்து டி. எம்.சி தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும்.  மேலும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடி யும். கோடைக் காலங்களில் அப்பர் அமரா வதி அணையில் இருந்து தண்ணீரை அமரா வதி அணைக்கு கொண்டு செல்ல முடியும். அமராவதி அணைக் கட்டும் போது ராமகு ளம் மற்றும் ஆற்று பாசனம் மட்டுமே இருந்த  நிலையில், தற்போது புதிய வாய்க்கால்  மூலம் பாசன பரப்பு அதிகப்படுத்தபட்டுள் ளது. மேலும் அமராவதி பாசனப் பகுதி என்பது நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய் யும் நஞ்சை நிலமாக இருந்த விளை நிலம், தற்போது மக்காச்சோளம், காய்கறிகள் என  விவசாயம் செய்யும் புஞ்சை நிலமாக மாறி யுள்ளது. அதே போல் கோடைக் காலங்க ளில் கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல் லாமல் போகும் நிலைமை உள்ளது. இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ஐம் பது ஆண்டுகளுக்கு முன்பாக மழைக் காலங் களில் தண்ணீரைச் சேமித்து வைக்கும் வகை யில்  அமராவதி அணைக்கு மேல் தடுப்பு அணை  கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியி டப்பட்டது. ஆனால் அணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்  மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கட லில் கலக்கிறது. இப்படி வீணாக கடலில் கலக் கும் தண்ணீரைத் தடுக்க உடனடியாக அப்பர்  அமராவதி அணையைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் வைத்துள் ளார்கள்.