திருப்பூர், ஜூலை 19- திருப்பூர் மாநகரில் அங்கேரி பாளையம் சாலையில் பழைய எஸ்.பி. அலுவலகம் எதிரில் சோமு காம்பவுண்ட் வீதி எனப்படும் பாதையில் மழை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதுடன், சேறும், சகதியுமாக வாகனப் போக்குவரத் துக்கு பெரும் சவாலாக அமைந் துள்ளது. இதனால், ஆயிரக்கணக் கான பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பத்மாவதிபுரத்தின் தெற்குப் பகுதியில் ஓலப்பாளையம் செல் லக்கூடிய இடத்தில் இந்த பாதை அமைந்துள்ளது. அங்கேரிபாளை யம் சாலையில் இருந்து பத்மாவதி புரம் மற்றும் ஓலப்பாளையம் பகு திக்குச் செல்லவும், கிழக்கே சிவன் தியேட்டர் சாலையில் இருந்து மேற்கே அவிநாசி சாலையை அடைவதற்குமான பாதையாக இந்த வீதி அமைந்துள்ளது. அத்து டன் அங்கேரிபாளையம் சாலை யில் பிஷப் உபகாரசாமி பள்ளி, இன் பேன்ட் ஜீசஸ், தனியார் மழலையர் பள்ளி, கொங்கு வேளாளர் பள்ளி, ஏவிபி பள்ளி, அங்கேரிபாளையம் ஆரம்பப்பள்ளி, வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளி என தொடர்ச்சி யாக ஏழு பள்ளிகள் அமைந்திருக் கின்றன.
இப்பள்ளிகளில் ஏறத்தாழ 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இத்துடன் பத் மாவதிபுரம் பகுதியில் அமைந் துள்ள மாநகராட்சி பள்ளியிலும் ஏரா ளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக வும், மாலை 3.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள்ளாகவும் இந்த ஒட்டு மொத்த சாலையும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் திணறிக் கொண்டிருப்பதை ஒவ் வொரு நாளும் பார்க்க முடியும். இதில், அங்கேரிபாளையம் சாலை மற்றும் அவிநாசி சாலைக்கு இடையே பல இணைப்புச் சாலைகள் இருந்தாலும் கூட, பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீதிக ளுக்கு சோமு காம்பவுண்ட் வீதி தான் முக்கிய வழியாக உள்ளது. எனவே, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரவும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லவும் இப் பாதை முக்கியத்துவமானதாக உள் ளது.
ஆனால், கடந்த பல மாதங்க ளாக இந்த பாதை சேறும், சகதியு மாக, குப்பை கூளமாக வாகனங் களே செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளதாக இப் பகுதி குடியிருப்புவாசிகள் கூறு கின்றனர். இப்பிரச்சனை குறித்து மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், சீர்மிகு நகரம் திட்டத்தில் சரி செய்து தரப் படும் என உறுதியளித்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மழை காலங்களில் இந்த இடம் படுமோசமாக மாறிவிடும். குறிப் பாக அந்த வீதியில் மட்டும் மூன்று, நான்கடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கும். அந்த நீர் வடிந்து செல்லவும் உருப்படியான வழி யில்லாததால் நீண்ட நேரத்துக்கு இப்பிரச்சனை நீடிக்கும். ஒரு வழி யாக மழைநீர் வடிந்தாலும் அந்த இடம் முழுவதும் சேறும், சகதியும் பெருமளவு தேங்கி நிற்கும். பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வரக்கூடிய பெண் கள் மிகவும் ஆபத்தான பயணத்தை இந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அங்கேரிபாளையம் சாலையில் ஏராளமான பனியன் கம் பெனிகளும் உள்ளன. இங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். இப்பகுதியில் நில வும் வழக்கமான போக்குவரத்து நெருக்கடியை ஓரளவு குறைப்ப தற்கு, சமாளிப்பதற்கு இணைப்புச் சாலைகளை சீர் செய்ய வேண்டி யது அவசியமாகும். எனவே சோமு காம்பவுண்ட் வீதி எனப்படும் இந்த முக்கியமான இணைப்புச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதன் மூலம் ஆயிரக் கணக்கான மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என இப் பகுதிவாசிகள் கூறுகின்றனர். முதலில் இந்த வீதியில் வடிகால் வசதியை பலப்படுத்தி, கழிவுநீர், மழைநீர் சீராக வெளியேறி வடிந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். வாரக்கணக்கில் கொட்டி வைத்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் குப்பை மலையை அகற்ற வேண் டும். இப்பகுதி வீதிகளுக்குச் செல் லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற ஏற் பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். தொற்று நோய் பர வக்கூடிய சுகாதார சீர்கேடு பிரச் சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.