districts

img

தொடர் விபத்து ஏற்படுத்தும் பூண்டி சுற்றுச்சாலை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பூர், ஜூன் 10– திருப்பூர் மாநகராட்சி, திருமுரு கன் பூண்டி நகராட்சி எல்லையில் அமைந்துள்ள சுற்றுச் சாலையில் உரிய போக்குவரத்து அடையாளங் கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக் கப்படாததால் உயிரிழப்பு விபத்து கள் ஏற்படுவது தொடர்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு  இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில்  தண்ணீர் லாரி மோதி, பெண் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் அணிந்திருந்த நகையை யாரோ திருடிவிட்டதாக அவரது கண வர் புகார் கூறியுள்ளார். திருப்பூர் ஆத்துப்பாளையத்தை அடுத்த எஸ்.பி.கே. நகரைச் சேர்ந்த வர் தியாகராஜன் (வயது 41).  இவருடைய மனைவி சண்முகப்பி ரியா (33). இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தியாக ராஜன் ஊத்துக்குளி சாலையில் டயர்  கடை வைத்து நடத்தி வருகிறார்.  புதனன்று இரவு சண்முகப்பிரியா காய்கறி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் திருமுருகன்பூண்டிக்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிவிட்டு, பூண்டி சுற்றுச்சாலை  வழியாக வீட்டிற்கு திரும்பி வந்து  கொண்டிருந்தார். திருமுருகநாதசு வாமி கோவிலை அடுத்த வளைவு  அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது லேசாக உரசியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சண்முகப்பிரியா மீது லாரி யின் பின்சக்கரம் ஏறியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர். இந்த விபத்தில் பெண்  உயிரிழந்ததுடன், அவர் அணிந்தி ருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள்  திருடப்பட்டுள்ளது என்றும் அவரது கணவர் புகார் கூறியுள்ளார். இது குறித்தும் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டுள்ளனர். சண்முகப்பிரியா உயிரிழந்த சுற் றுச்சாலை பகுதி மிகவும் ஆபத்தான தாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் சாலை மூன்று கிளைகளாகப் பிரிகி றது. இந்த இடம் மிகவும் வளைவாக வும் உள்ளது. இரவு நேரத்தில் இந்த இடம் மிகவும் இருட்டாக இருக்கும்.

 வீதி விளக்குகள் கூட இங்கு இல்லை.  இதனால் சமீப காலமாக இந்த இடத் தில் விபத்துகள் தொடர் கதையாக இருக்கின்றன. இந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள் போதிய தெரு விளக்கு கள் அமைப்பதுடன், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகை யில் சாலைத் தடுப்புகள் ஏற்படுத்த  வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள்  கோருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற் றும் காவல் துறை இணைந்து போக் குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். சாலைப் பாது காப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத் தும் அரசு நிர்வாகம் அதற்கு இத்த கைய ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்வதே பொருத் தமாக இருக்கும் என்றும் சமூக ஆர்வ லர்கள் கூறுகின்றனர்.