districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் ஈரோடு,பிப். 27- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளி யேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் விவசாய தோட்டத்துக் குள் புகுந்தது. அங்கு இருந்த வாழைக்கன்றுகளை மிதித்து  சேதப்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட் டதாக தோட்ட உரிமையாளர் வேதனை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம்  உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்கு கள் வசித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட் களாக வனப்பகுதியில் கடும் வறட்சியால் குளம், குட்டை கள் வறண்டு கிடக்கிறது. இதனால், உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மேலும்,  விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்து கிறது. இதனால், வாழை, தென்னைகளை பயிரிட்டுள்ள விவ சாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி  அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்ப வரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு இருந்த  500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம்  மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்த வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரி வித்தார். மேலும் தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பு

ஈரோடு, பிப். 27- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொடுமுடி தாலுகா  கமிட்டி அமைப்பு மாநாடு கே.சங்கீதா தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்பு ராஜன் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் சட்டங்கள் மற்றும்  உரிமைகளை விளக்கி உரையாற்றினார். இதில், ஈரோடு  உழைக்கும் மக்கள் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.முருகேசன், மாவட்டதுணைத் தலைவர் ப.மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள், வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் எம்.லோகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.  இதை தொடர்ந்து கொடுமுடி தாலுகா கமிட்டியின் தலை வராக கே.சங்கீதா, செயலாளராக எம்.சசி, பொருளாளராக நிர்மலா, துணைத் தலைவர்களாக ஏ.நடராஜன், ஏ.சுரேஷ்கு மார், துணைச் செயலாளர்களாக எல்.புஷ்பராஜ், ஏ.சேகர்,  செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். இதேபோல மொடக்குறிச்சியில் நடைபெற்ற மொடக்கு றிச்சி தாலுகா கமிட்டி அமைப்பு மாநாட்டில் தலைவராக சுந்த ரம், செயலாளர் சொங்கப்பன், பொருளாளராக தனபாக்கி யம், துணைத்தலைவர்களாக வேலுசாமி, ஜெகநாதன், துணைச் செயலாளர்களாக தீபா உள்ளிட்டோர் தேர்வு செய் யப்பட்டனர்.  மாற்றுத்திறனாளிகள் குறைகளைத் தீர்க்க வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் கூட்டம்  நடத்த வேண்டும். கடந்த சில மாதங்களாக இக்கூட்டம் நடை பெறாதிருந்த நிலையில் கடந்த மாதம் 21 தேதியன்று கூட்டம் நடைபெற்றது. மேலும் பிப்ரவரி மாதம் இதுவரை கூட்டம்  நடத்தப்படவில்லை. எனவே, இம்மாத குறைதீர் கூட்டத்தை  மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத குக்கிராமங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற முடியும். இக்கோ ரிக்கைகயை வலியுறுத்தி மார்ச் 5 ஆம் தேதியன்று மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும்  போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோல மார்ச் 6 ஆம் தேதியன்று கொடுமுடி வட் டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத் துவது என முடிவெடுத்தனர்.

சிஐடியு ஆதரவு

ஈரோடு, பிப். 27- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வணிக கடன்களை 45 நாட் களுக்குள் செலுத்த வேண் டும் என்றும் அவ்வாறு  செலுத்தப்படாத வணிக கடன்கள் வருமானமாகக் கருதப்படும். அந்த வருமா னத்திற்கு வரி செலுத்த  வேண்டும் என ஒன்றிய மோடி வருமான வரியில் திருத்தம் செய்துள்ளது. மேலும் அது வருகிற மார்ச்  31 முதல் அமுலுக்கு வருகி றது. இச்சட்டத் திருத்தத் திற்கு காலக்கெடு வேண்டி  செவ்வாயன்று கடைய டைப்பு போராட்டத்திற்கு ஈரோடு கிளாத் மெர்சென்ட்ஸ்  அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தில் ஜவுளி  உற்பத்தியகங்கள், கிடங்கு கள், கடைகள் உள்ளிட்ட நிறு வனங்கள் பங்கேற்கிறது. மேலும் ஒன்றிய அரசிற்கு  எதிரான இப்போராட்டத் திற்கு தமிழ்நாடு விசைத்தறி  சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தினால் ஏரா ளமான விசைத்தறிகள் இயங்காது. சிறு,குறு தொழில்களைப் பாதிக்கும் ஒன்றிய மோடி அரசின் இச் சட்டத்திருத்தத்திற்கு  எதிராக  கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு சிஐ டியு ஈரோடு மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கம்  மற்றும் பொதுத்தொழிலா ளர் சங்கம் ஆதரவு தெரிவித் துள்ளது.

துணை தபால் நிலையம் மூடல்: வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.27- ஜாகிர் அம்மாபாளையம், விஜ யராகவன் நகர் பகுதியில் இயங்கி வந்த துணை தபால் நிலையம் மூடப் பட்டதை கண்டித்து, சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மா பாளையம் விஜயராகவன் நகர் பகுதி யில், காசக்காரனூர் துணை தபால் நிலையம் இயங்கி வந்தது. கடந்த 25  ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த  இந்த தபால் நிலையத்தில், ஆயிரக்க ணக்கானோர் கணக்கு தொடங்கி, வரவு செலவு வைத்து வந்தனர். மேலும் தபால்  நிலையம் வாயிலாக தங்க பத்திரம் திட்டம், நிரந்தர வைப்புத் தொகை, அன் றாட சேமிப்பு கணக்கு உள்ளிட்ட திட் டங்களில் இணைந்து, பல்வேறு சேவை களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அஞ்சல் நிலை யத்தை முன்னறிவிப்பின்றி மூடியது டன், பொதுமக்கள் தங்கள் தபால் மற்றும் அஞ்சலக சேவைகளுக்கு, சூரமங்கலம் தலைமை அஞ்சல் அலுவ லகத்தை பயன்படுத்திக் கொள்ள அறி வுறுத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்தும், உடனடியாக தபால் நிலை யத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சூரமங்கலம் பகு தியில் உள்ள தலைமை தபால் நிலை யம் முன்பு செவ்வாயன்று வாடிக்கை யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, அஞ்சல் நிலைய  அதிகாரிகளை கண்டித்து, பொதுமக் கள் முழக்கங்கள் எழுப்பினர்.

உதயநிதி கோவை வருகை

கோவை, பிப். 27- கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் புத னன்று (இன்று) கோவை வரு கிறார்.  இவர் வியாழனன்று, கோவை கொடீசியா வளா கத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “நான் முதல்வன் திட்டம்” மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நிய மன ஆணைகளை வழங்கு கிறார். பின்னர், கிராம ஊராட் சிகளுக்கு கலைஞர் விளை யாட்டு உபகரணங்களை வழங்க உள்ளார்.  எனவே, கோவையில் உள்ள கழகத் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்க வேண்டுமென, திமுக மாவட் டச் செயலாளர்கள் தங்க ளது அறிக்கையின் வாயி லாக தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் காப்பீட்டு துணை அதிகாரிகள் திணறல்

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் காப்பீட்டு துணை அதிகாரிகள் திணறல் ஈரோடு, பிப். 27- ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப் போது, ஓய்வூதியர்கள் காப்பீடு தொடர்பான சந்தேகங்களை,  அதன் குறைபாடுகளை தெரிவித்தபோது, அதிகாரிகள் திண றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் ஓய்வூ தியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிதித்துறை இயக் குநர் து.ஸ்ரீதர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜ  கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் ஓய்வூதியம், ஊதிய நிர்ணயம், நிலுவைத்தொகை, பொது சேமநலநிதி தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி  அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தி ரவிட்டார். முன்னதாக, காப்பீட்டு நிறுவனத்தினரிடம் ஓய்வூதிய தாரர்கள் நிலுவையில் உள்ள பலன்கள் குறித்த குறைபா டுகள் குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் கேள்வி எழுப்பி னர். இதுகுறித்து தெளிவு படுத்த ஆட்சியர் கூறியபோது, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் சார்ந்த அதிகாரிகள் பதில்  அளிக்க முடியாமல் திணறினர். இதனைத்தொடர்ந்து, ஆட்சி யர் மார்ச் 15 ஆம் தேதிக்குள் மருத்துவ காப்பீடு திட்ட பிரச்சனை களை களைய வேண்டும் என காப்பீட்டு நிறுவனம் சார்ந்த  அதிகாரிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டார்.  ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெறுகையில், அதுகு றித்த தெளிவோடு அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். ஆனால், கடமைக்கு வருவதுபோல் வந்து விட்டு செல் வதே எப்போதும் நடக்கிறது. இன்று நடந்த கூட்டத்தில் காப் பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கேள்வி  எழுப்பினோம், அதிகாரிகளுக்கு இதுகுறித்த எந்த வழிகாட்டு தலும் இல்லாததால் தெளிவு படுத்த இயலவில்லை. இதனைத் தொடர்ந்தே ஆட்சியர் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்ட தாக ஓய்வூதிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் சிறிது நேரம்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அடுத்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 20 ஆம் தேதியன்று நடைபெறும் எனத்  தெரிவித்து கூட்டம் முடிவுற்றது. இதில், அரசுத் துறை அலு வலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏரளாமானோர் பங்கேற்றனர்.

பாஜகாவில் இணைகிறேனா ? உதகை காங்கிரஸ் எம்எல்ஏ மறுப்பு

பாஜகாவில் இணைகிறேனா ? உதகை காங்கிரஸ் எம்எல்ஏ மறுப்பு உதகை,பிப். 27- பொய் செய்திகளை பரப்புபவர்களின் வயதை விட எனக்கு அனுபவம் அதிகம். நான் பாஜகாவில் இணைய உள்ள தாக கூறப்படும் தகவல் பொய்யானது என உதகை காங்கி ரஸ் எம்எல்ஏ கணேஷ் மறுத்துள்ளார்.  நீலகிரி மாவட்ட காங்கிரஸ்  தலைவரும் உதகை தொகுதி  எம்எல்ஏவுமான கணேஷ் செவ்வாயன்று செய்தியா ளர்களிடம் கூறுகையில், மத்தியில் 2014 ஆம் ஆண்டு மோடி  தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 10  ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3179 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். மேலும் 400 படகுகளும் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன. இவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், தற்போது ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை அரசு கைதுசெய்து, ஓராண்டு சிறை  தண்டனையும் விதித்துள்ளது. அவர்களை மீட்க மத்திய மீன்  வளத்துறை அமைச்சராக உள்ள தமிழகத்தை சேர்ந்த முரு கன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இது  தொர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, தமிழக மீனவர்களை வஞ்சித்து வரும் பிரத மர் மோடியையும், மீன் வளத்துறை அமைச்சர் முருகனை  கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) உதகையில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி யுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், பாஜக வில் நான் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவுகிறது. இது போன்ற பொய் செய்தி களை பரப்புபவர்களின் வயதை விட எனக்கு அனுபவம் அதி கம்.  நான் மாணவர் பருவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி யில் இருந்து வருகிறேன் என்றார். பேட்டியின்போது, காங்கி ரஸ் கட்சியின்  மாநில செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

சேலம், பிப்.27- சேலம் மாநகர் பகுதியில் வஉசி பூ மார்க் கெட் இருந்து வந்தது. இங்கு ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய்  மதிப்பீட்டில், பூ மார்க்கெட் புதுப்பிக்கப் பட்டு பணிகள் முடிவடைந்தது. இந்நிலை யில் காலங்காலமாக வியாபாரம் செய்து  வரும் வியாபாரிகளுக்கு கடை வழங்கா மல், புதிய வியாபாரிகளுக்கு லஞ்சம் பெற் றுக்கொண்டு கடைகளை கொடுப்பதாக குற் றம்சாட்டி, வியாபாரிகள் செவ்வாயன்று  சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவம் அறிந்து வந்த போலீசார்,  வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர், முன்பு கடைவைத்திருந்தவர்க ளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.