districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

கோவை, ஜன.12- தடாகம் அருகே மக்காச்சோளப் பயிர்களை சேதப்ப டுத்திய 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத் துறையினர் வாகனத்தில் ஒலி எழுப்பி விரட்டினர். கோவை மாவட்டம், தடாகம் அருகே கணுவாய் பகு தியில் மகேஷ் என்பவர், தனது வீட்டின் அருகே  உள்ள தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில், சனியன்று இரவு அங்கு வந்த 15க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், மக்காச்சோளத்தை சேதப் படுத்தியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு வந்த வனத்துறையினர் வாகனங்களில் ஒலி  எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சோமியம் பாளையம், வசந்தம் நகர் பகுதியில் இருந்து யானை கூட் டத்தை அண்ணா பல்கலைக்கழகம் பின்புறம் பவர்  ஹவுஸ் பகுதி வழியாக வனப்பகுதி நோக்கி விரட்டினர்.  மேலும் மனித - விலங்கு மோதல் ஏற்படாமல் இருக்க,  வசந்தம் நகர் பகுதி மக்கள் தனியாக நடந்து செல்வதை யும், வாகனத்தில் செல்வதையும் இரவு நேரங்களில் தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சீரழியும் சட்டம்-ஒழுங்கு புதுச்சேரி அரசு மீது சிபிஎம் கடும் விமர்சனம்

புதுச்சேரி, ஜன.12-  எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதால் புதுச்சேரி அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம்-கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள  பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட சோரியங்குப்பம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம்,  கும்ந்தாமேடு, மணமேடு கரையாம்புத்தூர் கிராமங்க ளில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் 25க்கும் மேற்பட்ட மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் அமைக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். இளைஞர்களை சீரழிக்கும் விதமாகவும் அப்பகுதி பெண்கள் குழந்தைகள் மக்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக அரசு உள்ளது.  மேலும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் குப்பை மேடாக பாகூர் பகுதி  வருகிறது. இத்துடன், நாளுக்கு நாள் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதி கரித்து வருகிறது. பாகூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களால் ஒரே மாதத்தில் மட்டும் 6 பேர்  மரணமடைந்துள்ளனர். குடித்து விட்டு தகராறுகள், சாலையில் செல்பவர்களிடம் வம்பு இழுப்பது, பெண்கள் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்வது, தங்களுக்குள் அடித்துக் கொண்டு செத்து மடிவதும் அதிகரித்துள்ளது. ஆடு,மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டுவது, வழிப்பறி, பொருட்களை திருடுவது என தினந்தோறும் சமூக குற்றங்கள் நடந்து வரும் இடமாக பாகூர் மாறி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் வாரம் ஒரு குற்றச் சம்பவம் மற்றும் கொலை சம்பவம் நடக்கும் அளவுக்கு இடமாக மாறியுள்ளது. எனவே, குற்றங்களுக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக எல்லையோரம் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை நவாத்தோப்பில் மற்றும் சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காவல் துறை சோதனை சாவடி மற்றும் பாதுகாப்பு காவல் மையம் அமைக்க புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

மது கடத்தியவரிடம் பணம் வசூல்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

விழுப்புரம், ஜன.12- மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க, பணம் வசூலித்து, விடுவித்த மதுவிலக்கு அமல் பிரிவு தலைமை காவலர்கள் மூன்று பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய அழகப்பன், காமராஜ் மற்றும் செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் மாதவன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன், கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த  வேலுார் மாவட்டம், ஆரணியை சேர்ந்த நபரை நிறுத்தியுள்ளனர். அவர், புதுச்சேரியில் 10 மது பாட்டில்களை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிச் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த காவலர்கள், வழக்குப் பதிவு செய்து கைது செய்வதாக மிரட்டியுள்ளனர். அப்போது பேரம் பேசிய காவலர்கள், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க,  ரூ.4,500 பணத்தை வாங்கியதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீசாரிடம் கெஞ்சியதால் வழக்கு போடாமல் அனுப்பியுள்ளனர். இது குறித்து தகவல், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் நடைமுறை

புதுச்சேரி, ஜன.12- புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை ஜன.12 முதல் அமலானது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்ததுடன், ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி யுள்ள நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே புத்தாண்டு முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறி வித்தது. அதன்படி போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். வினாடி-வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர். இதனிடையே புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேலும் சில நாட்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்திவிட்டு ஞாயிறு (ஜன.12) முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று அரசு நிர்வாகம், உயர் கல்வித்துறை சார்பில் உத்தர விடப்பட்டது. போக்குவரத்து போலீ சார் ஹெல்மெட் அணிவது பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளை தொடர்ந்து நடத்தி நடத்தினர். சாலை விபத்துகளில் ‘’உயிரி ழப்பு இல்லாத புதுச்சேரி என்ற மையக்கருத்தோடு ஹெல்மெட் அணிவது குறித்து பிரமாண்ட விழிப்பு ணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுச்சேரி போக்குவரத்து போலீசார் காலை முதல் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை அருகே போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன் குமார் திரிபாதி உத்தரவின்  பேரில் கிழக்கு - வடக்கு எஸ்.பி. செல்வம் தலைமையில் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாரும், மரப்பாலம் சந்திப்பில் கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமை யில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து அபாராதம் விதித்தனர். ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.  இதே போல் பாகூர், தவளக்குப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அறிவுறுத்தி அனுப்பினர். அதே நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.