உதகை, டிச.17- காட்டேரி பகுதி குடியிருப்புகள் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான வனப்பகுதியை கொண்டுள்ளது. அதேபோல் கூடலூர், குன்னூர், உதகை, மஞ்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியிலிருந்து வெளியே வரும் யானை கள் மற்றும் கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை போர்வை போர்த்தியது போல் புற்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து உள்ளது. இந்நிலையில், குன்னூர் பகுதியில் உள்ள புற்களை மேய்வதற்காக மேட்டுப் பாளையம் வன சரகத்தில் இருந்து 9 யானை கள் நீண்ட காலம் கழித்து குன்னூர் பகுதிக்கு படையெடுத்து உள்ளன. இவை ஒவ்வொன் றும் வரிசையாக மிடுக்காக வனப்பகுதியில் நடந்து செல்கிறது. இந்த யானைகள் தற் போது காட்டேரி அருகே உள்ள எஸ்டேட் குடி யிருப்பு பகுதியில் உனது வாழை மரங்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், யானை கள் அங்கிருந்து அருகே உள்ள வனப்பகுதிக் குள் சென்று மறைந்து கொண்டது. ஏற்கனவே வாழையை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளதால் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர லாம் என்பதால் வனத்துறையினர் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் வராமல் இருக்க அப்பகுதி மக் கள் தீ மூட்டியும், இசைக்கருவிகளை கொண்டு சத்தம் எழுப்பியும் வருகின்றனர். இதனிடையே இரவு நேரமாகிவிட்டதால் காட்டு யானைகளை மீண்டும் விரட்டும் பணி ஞாயிறன்று காலை தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.