மேட்டுப்பாளையம், நவ.17- மேட்டுப்பாளையத்தில் வேழம் இயலியல் பூங்காவில் அமைக்கப் பட்டிருந்த பொம்மை யானைகளை சேதப்படுத்திய காட்டுயானைக ளால், அதன் பணிகள் முடங்கி யுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் யானைகளின் வாழ் வியல் முக்கியத்தும் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பொது மக்க ளுக்கு உணர்த்தும் வகையில் வனத் துறை சார்பில் “வேழம் இயலியல் பூங்கா” அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோத்தகிரி செல் லும் சாலையில் உள்ள வனத்து றைக்கு சொந்தமான அரசு மரக் கிடங்கு வளாகத்தில் இப்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அடர்ந்த காடுகள் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள மேட்டுப் பாளையம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி என எண்ணற்ற வன உயிரினங்கள் இருந்தாலும், இதில் யானைகளின் எண்ணிக்கையே அதிகம். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப் பாளையம் வனப்பகுதி அமைந் துள்ளதால் இவ்வழியே கூட்டம் கூட் டமாக யானைகள் வலசை செல் வது வழக்கம். வழித்தடப்பாதையில் ஏற்படும் இடையூறுகளால் திசை தப்பும் சில யானைகள் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவ தும்,
இதனால் யானை - மனித மோதல்கள் நடப்பதும் தொடர் நிகழ்வாகி விட்டது. யானைகளின் நடமாட்டத்தை கண்டவுடன் சிலர் அதனை கற்களாலும், தீபந்தங்க ளாலும், ராக்கெட் வெடிகளாலும் தாக்குவது, சட்டவிரோதமாக நேரடி மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த எதிர் கொள்ளலில் யானைகள் உயிர் இழக்கின்றன. யானை தாக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்படு கின்றன. இதனால் யானைகள் மீதான மனிதர்களின் வெறுப்புணர்ச்சியை போக்கும் முயற்சியாக, வனம் மற் றும் சூற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம், அவற் றின் வாழ்வியல் முறை, குணாத சியங்கள் போன்றவற்றை விளக்க இந்த “வேழம் இயலியல் பூங்கா” அமைக்கப்பட்டு வந்தது. உலகில் வாழ்ந்த யானை இனங் கள், அழிந்து போன யானை இனங் கள், வாழ்ந்த காலங்கள், நம் சங்க இலக்கியம் மற்றும் காலாச்சாரத் தில் யானைகளின் பங்களிப்பு, அதன் வரலாறு போன்றவற்றை விளக்கும் சுவர் ஓவியங்கள், சிற் பங்கள், அரிய புகைப்படங்கள், மன் னர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட யானைகள் உருவம் பொறித்த நாணயங்கள் என இந்த பூங்காவில் வைக்கப்பட்டு இப்பணிகள் ஏறத்தாழ 70 சதவிகிதம் வரை நிறை வடைந்தும் விட்டது.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக இப்பணிகள் அனைத்தும் நிறுத் தப்பட்டு “வேழம் இயலியல் பூங்கா” திட்டம் முடக்கப்பட்டுள் ளது. வனத்தை ஒட்டிய பகுதியில் இப்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் பூங்காவிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் காட்டு யானை கள் தாகம் தீர்க்க வனத்துறை கட்டி யுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்த வரும் யானை கூட்டங்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ள இப்பூங்காவினுள் புகுந்து அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள யானை பொம்மைகளை, நிஜ யானைகள் என நினைத்து தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளையும், வனத் துறையினரையும் கடந்த இரண்டாடுகளுக்கும் மேலாக கலங்கடித்து வரும் பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை இப் பூங்காவினுள் அடிக்கடி புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி வரு கிறது. இதனால் பல லட்சம் செலவில் கலைநயத்துடன் உருக்கப்பட்ட பிரமாண்ட யானை பொம்மைகள் சேதமடைந்து வருகிறது. இதனால் தற்போது இந்த சேதமான யானை உருவ பொம்மைகள் அப்புறப் படுத்தபட்டு காட்டு யானைகளின் கண்களில் படாதவாறு மரக்கிடங் கின் மூலையில் போடப்பட்டுள்ளது. யானையை குறிக்கும் வேழம் என்ற செந்தமிழ் சொல்லில் அமையவுள்ள இவ்விழிப்புணர்வு விளக்கப் பூங்கா குறித்த ஆர்வம் உருவாகி யிருந்த நிலையில் இத்திட்டம் தற் போது முடக்கப்பட்டு கிடப்பது பொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே ஏமாற்றதை உருவாகியுள்ளது. முடங்கி கிடக்கும் இப்பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி விரைவில் இவ்விழிப் புணர்வு பூங்காவை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, அரசின் கவனத்திற்கு வேழம் இயலியல் பூங்கா குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள் துவங்கும், என்றனர்.