கோவை, ஜூன் 14- கோவை அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக் குள் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்திற்கள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், பேரூர் அடுத்துள்ள தீத்திபா ளையம் கிராமத்தில் குடடை தோட்டம் அருகில் தாமோத ரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், ஞாயிறன்று இரவு சுமார் 5க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்து பயிர் களை சேதப்படுத்தியது. மேலும், அவர் தங் கியிருந்த வீட்டு கதவை உடைத்து வீட்டு உபயோக பொருட்களையும் சேதப்படுத்தி யது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வருவதற்கும் முன்பாகவே யானைகள் அங் கிருந்து சென்றுவிட்டன. இந்நிலையில், இரவு முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற் றும் காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகள், திங்களன்று அதிகாலையில் காளம்பாளையம் பகுதியிலிருந்து வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. ஆனால், ஒரு யானை மட்டும் வழி தெரியாமல் வேளாங் கண்ணி குடியிருப்பு பகுதியில் நின்றுவிட் டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர் காட்டுயா னையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி யில் ஈடுபட்டனர். இதனிடையே காட்டுயானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் படுகாய மடைந்தார். இதையடுத்து நாகராஜை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாட் டம் இருப்பதால் பகல் நேரத்தில் யானையை விரட்டினால் அசாம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், காட்டுயானையை கண்காணித்து இரவு நேரத்தில் வனத்திற் குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.