வளர்ப்பு பிராணிகளை குறிவைக்கும் வன விலங்குகள்
உதகை, ஆக.19 - நீலகிரியில் வளர்ப்பு பிராணிகளை குறி வைத்து சிறுத்தைகள் வேட்டை யாடி வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வன விலங்கு கள் ஊருக்குள் வருவதும், அடிக்கடி மனிதர்களைத் தாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்க தமிழக அரசும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுப் பார்களா? என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வன பகுதி யில் இருந்து ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில், கள்ளக்கொரை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்கு முன் வந்த சிறுத்தை பாய்ந்து வந்து வீட்டின் முன்னால் இருந்த நாயை தூக்கி சென்று விட்டது. நாயின் அலறல் 10 நொடிகளில் முடிந்துவிட்டது. இதே போல் உப்பட்டி பகுதியிலும் வீட்டுக் குள் புகுந்த சிறுத்தை, சத்தம் இல்லா மல் மெதுவாக நடந்து வந்து தூங்கிக் கொண்டிருந்த நாயை கவ்வி சென்று விட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளன. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரு கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து எளிதான இரையாக உள்ள வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் பொதுமக் களை பீதி அடைய செய்து வருகிறது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத் தைகள் வருவதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. ஒருவேளை வளர்ப்பு நாய் கிடைக்காவிட்டால் மனி தர்களையும் தாக்கும் அபாயம் உள் ளதால், பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர்.
ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை, ஆக.19- கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டித்து கோவை யில் ஹோமியோபதி மருத்துவர் சங்கத் தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய் யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. நாடு முழுவ தும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கும், பெண் களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, ஹோமியோபதி மருத்து வர்கள் கருப்பு ஆடை அணிந்து கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு
நாமக்கல், ஆக.19- பள்ளிபாளையத்தில் தனியார் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கண்டிப்பு தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், மதுபானக்கடை அமைப்பதற்காக ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அதிக ளவில் குடியிருப்புகள் உள்ளன. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதி கம் உள்ளனர். மூன்று தனியார் மருத்துவமனைகள் அருகருகே உள்ளன. எனவே, மேற்கண்ட இடத்தில் மதுபானக்கடை அமைத்தால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அதிகளவில் பிரச்சனை கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட ஆட்சி யர் உடனடியாக மேற்படி இடத்தை ஆய்வு செய்து, மதுபானக்கடை அமைக்க உரிமம் வழங்காமல் தடுத்து நிறுத்த வேண்டுமென கண்டிப்புதூர் பொதுமக்கள் திங்க ளன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
யானை வழித்தடத்தில் உள்ள விடுதிகளை இடித்து அகற்ற ‘நோட்டீஸ்’
உதகை, ஆக.19- நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடியை ஒட்டிய, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள கட் டிடங்களை அகற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு யானை ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந் தார். இதில், 2011ல், யானை வழித் தடங்களில் உள்ள அனுமதியில் லாத சுற்றுலா விடுதிகள், ஆக்கிர மிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விடுதி உரிமை யாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றமும் உத்தரவை உறுதி செய்தது. இதில் உச்ச நீதிமன்றத் தின் உத்தரவுபடி, 2018 ஆகஸ்ட் 12இல் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம், ‘சீல்’ வைத்தது. வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கை யாக, சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, விண்ணப்பதாரர் களின் ஆவணங்களின் அடிப்படை யில், யானை வழித்தடங்களில் சீல் வைத்த கட்டடங்களை பலமுறை ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானை வழித்தடங்களில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங் களை அகற்றும்படி, அதன் உரிமை யாளர்களுக்கு கடந்தாண்டு ‘நோட் டீஸ்’ அளித்தது. இதுவரை கட்டி டங்கள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், சீகூர் யானை வழித் தடத்தில், தனியார் விடுதி கட்டிடங் களை அகற்றி காலி செய்யும்படி, சோலுார் பேரூராட்சி, மசினகுடி உட்பட நான்கு உள்ளாட்சி அமைப் புகள் சார்பில், கட்டிட உரிமையா ளர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப் பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், உச்ச நீதிமன்றத்தின் உத் தரவுபடி, யானை வழித்தடங்கள் உள்ள தனியார் விடுதி கட்டிடங் களை அகற்ற, அதன் உரிமையா ளர்களுக்கு இரண்டாம் கட்ட ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் உரிமையாளர் கள் கட்டடங்களை அகற்ற வேண் டும். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற னர்.
தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
நாமக்கல், ஆக.19- பரமத்தியில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பங்கேற்றார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிஜிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி, துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பங் கேற்றார். இதனைத்தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், இன்றைய இளைஞர்களிடம் அரசுப்பள்ளி கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களில் படித்த மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால், நிறைய பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதே உண்மை. ஆகவே உங்களை நீங்கள் தகுதிப்படுத்திக் கொண்டு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் கவனத்துடன் பயணித்தால் நிச்சயம் சாதிக்க லாம், என்றார். முடிவில், கல்லூரியின் முதன்மையர் க.பெரிய சாமி நன்றி கூறினார்.
ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் கண்காட்சி
நாமக்கல், ஆக.19- ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் கண்காட்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கள் சங்கம் மற்றும் ரிக்ஸ் இன்ஜினியரிங் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் ஆகியவை இணைந்து நடத்தும் நான்கா வது தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இந்த கண் காட்சியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட நவீன ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் நுட்ப கருவி கள் அடங்கிய தனியார் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தது. தொழிலுக்கு தேவையான கம்ப ரசர் ராடுகள், கியர்கள்,ஆட்டோமேஷன் வெல்டிங் மிஷின், 3000 அடி வரை துளையிடக் கூடிய பிஆர்டி நிறுவனங்க ளின் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ரிக் வண்டி, மலை களைக் குடைந்து செல்லக்கூடிய ரிக் வண்டிகள் என பல்வேறு ரிக் வாகனங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ரிக் உரிமையாளர்கள் சங்கர் தலை வர் லட்சுமணன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் ரெஸ்கா என்கிற ரிக் இன்ஜினியரிங் அண்ட் சர்வீஸ் சென்டர் அசோசியேஷன் தலைவர் பி.ஆர்.டி நிறுவனங்களின் உரிமையாளர் பரந்தாமன், பிஆர்டி நிறு வனங்களின் தலைவர் தங்கராஜ், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் கட்ட கோரிக்கை
உடுமலை, ஆக.19 - மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில் நீர் வழித்தடங்க ளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் தெரிவிக் கையில், உடுமலை, மடத்துக்குளம் உள் ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் அதிகம் உள்ளன. மேலும் இப்பகுதி மக்களின் பிர தான தொழிலாக விவசாயம் உள்ளது.இப்ப குதியில் உள்ள விளை நிலங்களுக்கு அமராவதி திருமூர்த்தி அணைகளில் இருந்து மண்டல வாரியாக தண்ணீர் திறந்து விடப்ப டுகிறது. கடந்த ஆண்டுபருவ மழை இல்லாத தால்,அணைகளில் இருந்து போதுமான நீர் திறந்து விடப்படவில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் அழி யும் தருவாய்க்கே சென்றது.பலர் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி மரங்களை காப்பாற்றினர். பலரால் தண்ணீரை விலைக்கு வாங்க முடியாமல் போனதால், தென்னை மரங்கள் கருகி வீணாகியது. இதனால் விவசாயிகளுக்கு பெருமிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில், பருவ மழை சீராக பெய்து வருகிறது. இம்முறையா வது நீர் வழித்தடங்களில் முறையான தடுப்ப ணைகள் கட்டி மழை நீரை சேகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நான் முதல்வன் திட்ட பயிற்றுநர்களுக்கு சம்பள பாக்கி
ஈரோடு, ஆக. 19- நான் முதல்வன் திட்ட பயிற்றுனர்களுக்கு சம்பள பாக் கியை உடனே வழங்க வேண்டும் என ஈரோடு ஆட்சியரி டம் இத்திட்ட ஊழியர்கள் முறையிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவினர் நான் முதல்வன் திட்ட ஊழியர்கள் மனு அளித்தனர். பயிற்றுனர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசின் சிறப்பு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய, 5 மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் உள்ளோம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் மூலம் மாநில அளவில் நடத்தப்பட்ட தைத் தொடர்ந்து. பயிற்றுனர்களை தேர்வு செய்து, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்கள் மூலம் ஒவ்வொரு கல்லுாரியிலும் தலா 9 முழு வேலை நாள் அல்லது 18 பாதி நாட்கள் என்ற அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மார்ச்சில் பயிற்சி முடித்து இதுவரை அரசின் திட்டப்படி தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளோம். இதற்கான போக்குவரத்து செலவு, உணவு, பயிற்சிக்கான உபகரணங்கள் போன் றவை எங்களுடையது. இதற்காக தினமும், ரூ.1,500 முதல், ரூ.2 ஆயிரம் வரை ஊதியமாக நிர்ணயித்து, ஒரு பயிற்று னருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 40ஆயிரம் வரை ஊதிய மாக வழங்க வேண்டியுள்ளது. தொடர்புடைய என்ஜிஓ மூலம் இதனை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் எங்களது வங்கி யில் செலுத்த வேண்டும். அதன்படி சில மாவட்டங்களில் மட்டும், இத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங் களில் ஊதியம் வரவாகவில்லை. இவ்வாறு பயிற்றுனர்க ளுக்கு ரூ.40ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் பாக்கி உள்ளது. இதற்கிடையில் தற்போது, 2ஆம் கட்ட பயிற்சிக்கு பயிற்றுனர்களை தேர்வு செய்துள்ளனர். அதில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்தவர்க ளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில், பழைய நபர்க ளுக்கு வாய்ப்பு வழங்காத நிலையும் உள்ளது. இதுபற்றி, மேம்பாட்டு மைய இயக்குனர் இன்னொ சன்ட் திவ்யாவிடமும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, பயிற்றுனர் களின் வாழ்வாதாரம் கருதி, முழு தொகையையும் உடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி!
நாமக்கல், ஆக.19- நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருவர் தற் கொலைக்கு முயன்ற சம்பவத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மின்னாம்பள்ளி அருகே உள்ள அண் ணாநகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது சொந்த பட்டா நிலத்தில் உள்ள வீட்டினை கடந்த ஆக.15 ஆம் தேதி யன்று ஒரு சிலர் இடித்து விட்டதாகக்கூறி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படு கிறது.இந்நிலையில். திங்களன்று ஆட்சியர் அலுவல கத்திற்கு குடும்பத்தினருடன் வந்த செல்வராஜ், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிதீ குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்எல்ஏ மீது நில மோசடி புகார்
கோவை, ஆக 19- கோவையில் அதிமுக எம்எல்ஏ நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், அவரது உறவினர், தனி யார் நிறுவனம் ஆகியோர் இணைந்து, ஒரே குடும்ப வாரிசுதார்களான 30க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதா கவும் கோவை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காளிக்கோனாரின் வாரிசுதாரர்கள் அவர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை உயிரு டன் இல்லாதவர்களை, உயிருடன் இருந்தது போன்று மோசடி செய்து நிலத்தை அபகரித்து விட்டனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமை யியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ சக்தி கார்டன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வீட்டு மனைகளாக விற்பனை செய்து வருவதா கவும், அதை தடுத்து நிறுத்துவதற்காக பொதுமக்களிடம் இந்த தகவலை தெரிவிப்பதற்கும் மோசடியாக வீட்டு மனைகளை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக் கொண்டுனர். மேலும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திட இருப்பதாகவும் அதற்கு அனு மதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பி னர் ஜெயராமன் மற்றும் அவரு டைய உறவினர் மணிகண்டன் இவர்க ளுடன் சேர்ந்து ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்துள்ளதா கவும், இது குறித்து புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எப்படி இவர்கள் சொத்துகளை விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து கேள்வி எழுப்பி னால் தங்களை அவர்கள் மிரட்டுவதாக வும் தங்கள் உயிருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அவர்கள் மூவரும் தான் பொறுப்பு என தெரிவித்தனர்.