சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கேள்வி
கோவை, ஜன.9- தஞ்சை, மைக்கேல்ராஜ் பட்டி சம்ப வத்தை தேசிய பிரச்சனையாக கிளப்பிய பாஜக அண்ணாமலை, ஈஷா மையம் சென்ற சுபஸ்ரீ மர்ம மரணத்திற்கு நீதி கேட்க தயங்கு வது ஏன். சுபஸ்ரீ இந்து பெண் என்பதை அண் ணாமலை அறியவில்லையா என சிபிஎம் மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார். தொழிலாளர் வர்க்கத்தின் அடையாள மாய், சாட்சியாய் திகழ்கிற சின்னியம்பாளை யம் தியாகிகளின் 77 ஆம் ஆண்டு நினைவு தினம் சிபிஎம், சிபிஐ இரண்டு கட்சிகளால் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. முன்ன தாக செஞ்சட்டை பேரணியும், தியாகிக ளுக்கு மலர் வளையம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சின்னி யம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஐ சூலூர் தாலுகா செயலாளர் பி.எஸ். சண்முகம் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் சூலூர் தாலுகா குழு உறுப்பினர் பால கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இதில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகை யில், தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணா மலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் பிடித்த திருடர்களை விட கூடுத லான திருடர்களை அந்த கட்சியில் இணைத் துள்ளார். தன்னுடை கைக்கடிகாரத்திற்கான பில்லை காட்டுகிறேன் என்றவர், காட்ட மறுக் கிறார். தங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் விதமாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், ஊடகத்தினரை மிரட்டுகி றார். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப கொலிஜியம் பரிந்து ரைக்கிறது. இதனை ஒன்றிய பாஜக அரசு பரி சீலிக்க மறுக்கிறது. மாறாக பாஜகவிற்கு சாத கமான தீர்ப்புகளை வழங்குகின்ற நீதிபதி களை கவர்னராக மாற்றி நீதித்துறையை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறார் கள். இது ஜனநாயகத்தை மிகப்பெரிய கேள் விக்குறியாக மாறும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முகாந்திரத்தை மாற்றி ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக அரசு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால், ஒரே சாதி என அறிவிக்க மறுக்கின்றது. இங்கே உள்ள ஆளுநர் ரவி, இந்த தேசமே ரிஷிகளால் ஆனாது எனவும், தமிழ்நாட்டை தமிழகம் எனவும் கூறி வருவது அவர் எவ்வ ளவு சங் பரிவார சிந்தனை உடையவர் என்ப தும், வராலாற்றை சிறுதும் பயிலாதவர் என் பது தெரிகிறது. எழுபத்தி இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொன்ட சங்கரலிங்க னார் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என உயிர் நீத்த வரலாற்றில் தோன்றியது தமிழ் நாடு என்பதை ஆளுகின்றவர்கள் அறிய வேண்டும், என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் திய குழு உறுப்பினர் பி.சண்முகம் பேசுகை யில். நம்முடைய சின்னியம்பாளையம் தியா கிகள் வாழும் காலத்தை காட்டிலும் தொழிலா ளர் வர்க்கத்தின் சாட்சியாக ஒரே குழியில் புதைக்கப்பட்டு உலகிற்கே சமூக நீதி சாட்சி யாக, பெரிய வரலாறாக திகழ்கின்றனர். இத்தியாகிகளின் லட்சியத்தை முன்னெடுப் போம். வர்க்க ஒற்றுமையை பாதுகாப் போம். தற்போது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் சமூகத்தில் நிலவு கிறது. கோவையில் சில தினங்களுக்கு முன்பு ஈஷா யோகா பயிற்சி மையத்திலிருந்து வெளி யேறிய பெண் சுபஸ்ரீ மர்ம மரணம் நம்மி டையே பல கேள்விகளை உருவாக்கி உள் ளது. இறந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு பல ஜனநாயக அமைப்புகள் நீதி விசார ணைக்கு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு விசாரனை செய்வதில் தீவிரம் காட்ட வேண் டும். சட்டமன்ற கூட்டத்தில் இடதுசாரி கட்சி கள் மற்றும் காங்கிரஸ்,ஜனநாயக கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளனர். கடந்த காலத்தில் போராட்டத்தினால் பல் வேறு தீர்வுகளை கண்டுள்ள தொழிலாளி வர்க்கம், தில்லி விவசாயிகள் போராட்டத் தின் போது ஒன்றிய அரசை மண்டியிடச்செய் தது. ஒன்றிய அரசு துணையுடன் செயல்படுவ தாக இங்குள்ள சாமியாருக்கு அஞ்சி ஜக்கி வாசு தேவ் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது கூடாது. தஞ்சாவூரில் மைக்கேல் ராஜ் பட்டியில் நிகழ்ந்த சம்பவத்தை தமிழக பாஜக தேசிய பிரச்சனையாக உருவாக்கி யது. ஆனால், சுபஸ்ரீயின் மரணத்திற்கு நியா யம் கேட்கின்ற விஷயத்தில், மெளனமாக ஈஷாவிற்கு ஆதரவாக நிற்கிறது, சுபஸ்ரீ இந்து மதம் என்பதை பாஜக விற்கு தெரியாதா, அல்லது போலிச்சாமியார்தான் வேண்டும் இந்து பெண்ணிற்கு நியாயம் வேண்டாம் என கருதுகிறதா என கேள்வி எழுப்பினார். இதில், சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.