காட்சிப்பொருளாகவே இருக்கும் தண்ணீர் தொட்டி திறப்புவிழா காண்பது எப்போது?
ஈரோடு, ஜூன் 12- காட்சிப்பொருளாகவே இருக்கும் தண்ணீர் தொட்டி திறப்பு விழா காண்பது எப்போது? என ஈரோடு மாநகர் அம்பேத்கார் நகர் மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கி றார்கள். ஈரோடு மாநகரில் நாராயணவலசு என்கிற பகுதி உள்ளது. இங்குள்ள அம்பேத்கர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கட்டடத்தின் தாங்கும் திறன் காரணமாக மாடியில் தொட்டி அமைத்து வீடு களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை. எனவே, தரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் வரும் தண் ணீரை பிடித்து பயன்படுத்த வேண்டும். குடிநீருக்கு தேவை யான அளவு குறித்த நேரத்தில் வருவதைப் பிடித்து பயன்படுத் திக் கொள்கின்றனர். மற்ற தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக் குறை உள்ளது. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்பாட் டிற்குத் தேவையான அளவு பிளாஸ்டிக் பேரல், டேங்க்குகள் வாங்கி வைத்துள்ளனர். கிடைக்கும் நீரை அதில் நிரப்பி வைக்கின்றனர். பின்னர் அதனை இயன்றவர்கள் சிறிய குடங்களில் எடுத்து செல்கின்றனர். பலர் சிறிய மின் மோட் டார் வைத்து உறிஞ்சி எடுக்கின்றனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை போக்க, அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆள்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. மின் இணைப்பு பெற்று 6 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் தொட்டியும் வைக் கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை திறக் கப்படவே இல்லை. காட்சி பொருளாகவே நீடிக்கும் தண்ணீர் தொட்டியை உடனடியாக திறப்பு விழா செய்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது இப்பகுதி மக்க ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அணைப்பாளையம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரிடம் திங்களன்று மனு அளித்தார். அம்மனுவில், அணைப்பாளையம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டு, பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் பல ஆண்டுகளாக இப்பாலப்பணி முடிக்கப்படாமல் இருக் கிறது. தற்போது நொய்யல் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பாலத்தின் இருபுறமும் சரி யான முறையில் தார்ச்சாலை அமைக்கப்படாமல் மண்சாலை யாக போடப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக மண்சாலை கரைந்து போய் பாலத்திற்கு ஏறும் வழியும், இறங்கும் வழியும் குண்டும், குழியுமாக மாறியுள் ளது. இதனால் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட் டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் கீழே விழுந்து அடி பட்டு காயமுற்று செல்லும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், திங்களன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட் டுள்ளன. பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்கள் வாகனங்களில் சென்றுவரும் நிலை அதிகரித் துள்ளது. பள்ளி பேருந்துகளும் இவ்வழியை பயன்படுத்து கின்றனர். மிக மோசமாக உள்ள சாலையின் காரணமாக ஏதே னும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் முன்பு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இருபுறத்திலும் தரமான தார்ச் சாலை அமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள் ளார். நிதி வந்தால் வேலை: அதிகாரியின் பதில் இது குறித்து உதவிப் பொறியாளர் சுரேஷ் கூறுகையில், 2006 ஆம் ஆண்டு இந்த பாலத்திற்கான திட்டத்திற்கு ரூ.6 கோடி என்று முடிவு செய்யப்பட்டது. பின்பு நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2015 ஆம் ஆண்டு இந்த பாலப் பணிகளுக்கு ரூ.15 கோடி நிதி தேவைப்படுவதாக தெரிவித்தோம். அதன் பிறகும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டது. இந் நிலையில் தற்பொழுது ரூ.42 கோடி என இந்த திட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி வரும் பட்சத்தில் உடன டியாக பாலம் வேலை செய்யப்படும். தற்காலிகமாக பொறி யாளர்ளுடன் ஆலோசித்து சாலையில் மண் கொட்டி சீர மைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
சமுதாய கூடத்தை மீட்டுத்தர வலியுறுத்தல்
தருமபுரி, ஜூன் 12- சமூதாய கூடத்தை மீட்டுத்தர சித்தல்பாடி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட் பட்டது, சிந்தல்பாடி கிராமம். இங்கு அனைத்து சமூக மக்க ளும் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் பயன் பாட்டிற்காக சமூதாய கூடம் அமைக்கப்பட்டது. இதில், திரு மணம், காதனிவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந் தன. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் வாரிய அலுவலகம் சிந்தல்பாடி கிராமத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகத்திற்காக மக் கள் பயண்படுத்தி வந்த சமூதாய கூடத்தை மின்வாரிய அலு வலகம் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் தொடந்து சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருவதால் சிந்தல்பாடி கிராம மக்கள் சுப நிகழ்ச்சி களை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தற்போது திரு மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்றால் பாப்பிரெட்டிப்பட்டி உள்ள திருமண மண்டபத்தில், அதிக பணம் கொடுத்தே நிகழ்வுகள் நடத்த வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. இங்குள்ள பெரும் பகுதி ஏழை மக்களுக்கு அத் தகைய வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அலுவலகத்திற்க்கு புதிய அலுவலகம் அமைத்து, சமுதாய கூடத்தை மக்கள் பயண்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சிறுதானியங்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு: கோவை ஆட்சியர் பேச்சு
கோவை, ஜூன் 12- சிறுதானியங்களால் உருவான பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது என பொள்ளாச்சியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்களுக்கான கருத்தரங்கம் பொள்ளாச்சியில் உள்ள தனி யார் கல்லூரியில் நடைபெற்றது. இதனை பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். சார் ஆட்சியர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரு முருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத் தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகை யில், சிறுதானிய பொருட்களுக்கு சர்வதேச அளவில் வர வேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த் தக ரீதியான பயன்கள் கிடைக்கும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டு களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்ற னர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போது மான விளைச்சலும் இருக்காது. மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும், என்றார்.
சிலிண்டர் கசிவால் தீ விபத்து 5 தொழிலாளர்கள் படுகாயம்
அன்னூர், ஜூன் 12- அன்னூர் அருகே எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த னர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப் பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நிறு வனத்தை ஒட்டி உள்ள வீடு ஒன்றில், அங்கு பணிபுரிந்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் (23), தனஞ் ஜெய்(24), தரம் பீர்(35),வீரேந்தர்(36), அனுராக்(26) ஆகிய 5 பேரும் ஒன்றாக தங்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்ப தால் அறையிலேயே சமைத்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த எரிவாயு கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற் பட்டுள்ளது. இதில் 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இச் சம்பவம் குறித்து அன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்
ஈரோடு, ஜூன் 12- சத்தியமங்கலம் புலிகம் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் வனவிலங்கு கணகெடுப்பு பணி திங்களன்று துவங்கியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என். பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக் கும் பணி திங்களன்று துவங்கியது. இப்பகுதியில் வரும் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு, மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி திங்களன்ற முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட் டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2 ஆம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும். டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப் புதூர், கொங்கர்பாளையம், விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 9 பேரும் உயிரிழந்த சோகம்
சேலம், ஜூன் 12- சேலம் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காமடைந்து சிகிக்சை பெற்று வந்த 3 பெண்கள் ஞாயிறன்று உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கிய 9 பேருமே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், சர்க்கார் கொல் லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமியின் மகன் சதீஷ்குமார், நடே சன், பானுமதி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். எஸ்.கொல்லப்பட்டி யைச் சேர்ந்த பிரபாகரன், மஜ்ரா கொல் லப்பட்டியைச் சேர்ந்த மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை (46), பிருந்தா (29) ஆகிய 6 பேர் படு காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேரும் சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் உயிரி ழந்தனர். மற்றவர்களுக்கு மருத்துவர் கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சனியன்று இரவு மணிமேகலையும், ஞாயிறன்று மதியம் பிருந்தாவும் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தனர். வசந்தாவுக்கு மட் டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று இரவு உயிரி ழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 9 பேரும் பலியா னது குறிப்பிடத்தக்கது.