திருப்பூர், ஜூலை 10- நலவாரிய குளறுபடிகள் குறித்து சிஐடியு தெருமுனை கூட் டம் கேவிஆர் நகரில் நடைபெற்றது. நலவாரிய குளறுபடிகளை களைய வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி முறைசாரா தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதையொட்டி கோரிக்கைகள் குறித்த தெருமுனைக்கூட்டம் கேவிஆர் நகரில் நடைபெற்றது. பகுதிக்குழு பனியன் சங்கச் செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை கூட்டத்தில், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.சிவராமன், திருப்பூர் பொதுத்தொழிலா ளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கப் பொருளாளர் டி.ஜெயபால், தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.லெனின்குமார் ஆகி யோர் உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட நிர் வாகி பி.பாலன், மாதர் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் எஸ். பானுமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி பா.ஞான சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.