முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் திருப்பூர், முருகம் பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் செல்வராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து, பெண்கள் 500 பேர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 50 பேருக்கு புதிய ஆடைகளை வழங்கினார். இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், மாநிலப் பிரசார அணி செயலாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.