districts

img

நலத்திட்ட உதவி வழங்கல்

திருவாரூர் ஜூன் 10- திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 215 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.  இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.6250 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும், ஒரு நபருக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரமும், மீன்வளத்துறை சார்பில் 3 பேருக்கு மானியத்துடன் கூடிய ரூ.77 ஆயிரத்து 82 மதிப்பிலான நாட்டுப் படகிற்கான வெளிப் பொருத்தும் இயந்திரம் என மொத்தம் ரூ.95 ஆயிரத்து 832 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;