districts

img

சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் பதக்கம் வென்று திரும்பியவர்களுக்கு வரவேற்பு

சேலம், நவ.13- சர்வதேச அளவிலான கராத்தே போட்டி யில் பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான கராத்தே சாம் பியன்ஷிப் போட்டி கடந்த நவ.9, 10 ஆகிய இரண்டு நாட்கள் கோவாவில் நடைபெற் றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சேலத்தில் இருந்து குளூனி ஸ்ரீசாரதா மெட்ரிக் செயின்ட் ஜோசப் உள் ளிட்ட பள்ளிகளிலிருந்து 41 பேர் பங்கேற்ற னர். இதில் சேலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்ப டுத்தி, 34 தங்கம், 28 வெள்ளி, 20 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த னர். இதைத்தொடர்ந்து சேலம் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. சேலம் ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளி யில் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் விச்சு மணி, அருண்  பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று, இப்போட்டியில் நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியி லிருந்து கலந்து கொண்ட 22 வீரர்கள், 15 தங் கம், 5 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் வென்றனர். இதையடுத்து புதனன்று சொந்த  ஊர் திரும்பிய வீரர்களுக்கு, பள்ளிபாளை யம் பேருந்து நிறுத்த பகுதியில் பட்டாசு  வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.