கோவை, அக்.6- அரசியல் சாசனத்தில் உள்ள மதச் சார்பின்மைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் வகையில் ‘நாட்டைக் காப் போம்’ என்கிற பிரச்சார பயணக்குழு விற்கு கோவை, தருமபுரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தைப் பாதுகாக்கும் வகையில் தமி ழகத்தின் 6 முனைகளில் இருந்து இந்த பிரச்சார கலைப்பயணம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய மாநிலம் தழுவிய பிரச்சார கலைப்பயணம் 17ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சென்னை, வேலூர், கிருஷ் ணகிரி, உதகமண்டலம், நாகப்பட்டி னம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து தொடங்கி 70க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்களிப்புடன் நடை பெற்று வரும் இந்த பிரச்சார பயணம், 6 முனைகளில் இருந்தும் மதுரையில் சங்கமிக்கிறது. 17ஆம் தேதி பிரசார பயணம் நிறைவு பெற்று மாநில மாநாடு நடத்தப்படவுள் ளது. மாநாட்டில் இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்கும் நடவடிக்கை களில் பங்கேற்கும் குடிமை சமூக அமைப் புகள், அனைத்துக் கட்சிகள், அமைப்பு கள், சங்கங்கள் மற்றும் அதன் தலை வர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதன்தொடர்ச்சியாக, உதகையிலி ருந்து கோவை வந்த பிரச்சார பயண குழுவுக்கு கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத் தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடிய லூர், பழையூர், கணபதி, சரவணம்பட்டி, அன்னூர் ஆகிய இடங்களில் பிரச்சார குழுவின் உரைவீச்சும், மக்கள் ஒற் றுமை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற் றன.
இதில் நாட்டின் அரசமைப்புச் சட் டத்திற்கு மதவாத சக்திகளால் ஏற்பட் டுள்ள பேராபத்து குறித்தும், கல்வி உரிமை பறிப்பு, குலத்தொழிலை தக்க வைக்க விஸ்வகர்மா யோஜனா திட்டம், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் என ஒன் றிய அரசின் மக்கள் விரோத செயல் பாடுகள் குறித்தும், நாட்டுப்புற கலை கள் மூலம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் மக்கள் ஒற்றுமை மேடையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக் குமார், தமிழ்நாடு திராவிட சுயமரி யாதை கழக நிர்வாகி நேரு தாஸ், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மூர்த்தி, தபெதிக மாநகரச் செயலாளர், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி இதேபோன்று ஓசூரிலிருந்து புறப் பட்ட கலைக்குழு தருமபுரி மாவட்டத் தில் பிரச்சாரம் மேற்கொண்டது. அப் போது தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற பிரச்சார வர வேற்பு நிகழ்ச்சிக்கு இணை ஒருங்கி ணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் என்.சுபேதார் வர வேற்றார். தமிழக ஒற்றுமை மேடை பொறுப்பாளர் இரா.சிசுபாலன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலைச் சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி சாதிக் பாட்ஷா, சிஎஸ்ஐ செயலாளர் டியூக் பொன்ராஜ், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் சிராஜூதீன், தேசிய லீக் மாவட்டத் தலைவர் சிக்கந்தர், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட அமைப்பா ளர் செந்தில் ராஜா, சிறுபான்மை நலக் குழு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, தமுஎகச மாவட்டச் செய லாளர் சிங்காரவேலு, நாட்டை காப் போம் கலைக்குழு ஒருங்கிணைப்பா ளர் விண்சென்ட் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர்.