districts

img

பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

நாமக்கல், அக்.29- சிஐடியு தமிழ் மாநில 15 ஆவது மாநாடு கன்னியாகுமரியில் நவம் பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. மாநாட்டின் ஒரு  பகுதியாக மறைந்த தலைவர்களுக் கான நினைவு ஜோதி பிரச்சார பயணம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக, திருச் செங்கோடு அருகே உள்ள எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு நாமக்கல் சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது. சிஐடியு மாவட்ட உதவி  செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார்.  சிஐடியு தலைவர் கே.எஸ்.வெங்கடாசலம் வரவேற்புரை ஆற்றினார். ரயில்வே தொழிற் சங்க செயல்தலைவர் ஏ.ஜானகி ராமன், நாமக்கல் மாவட்ட தலைவர்  எம்.அசோகன், மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி,  மாவட்ட  உதவி செயலாளர் கு. சிவராஜ்,  மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், கரூர் மாவட்ட செய லாளர் முருகேசன், கிருஷ்ண மூர்த்தி, ரயில்வே சங்க தலைவர் கள் லெனின், சங்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒன்றிய மோடி  அரசு கொண்டு வந்த அமல் படுத்திய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் மாற்றுவது கைவிட வேண்டும்.

மின் கட்டண உயர்வினை  திரும்ப பெற வேண்டும். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும். தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுகளை குறைக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய் வது கைவிட வேண்டும். கட்டுமான தொழில்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட் களின் விலை உயர்வுகளை கட்டுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஜோதி பயண பிரச்சாரத் தில் முன்வைக்கப்பட்டது முடிவில்,  ஆர்.சக்திவேல் நன்றி கூறினார்.  தருமபுரி இதேபோன்று, சிஐடியு மாநில  மாநாட்டிற்கு செல்லும் சேலம் சிறை  தியாகிகள் ஜோதி மற்றும் தோழர் கே.எம்.ஹரிபட், எஸ்.காளிமுத்து ஆகியோரின்  நினைவு ஜோதி பய ணத்திற்கு  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சனியன்று எழுச்சிகரமான வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்நிகழ்விற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார்.  சிஐடியு மாநில  செயலாளர் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.கலாவதி,  ஜி.நாகராஜன், மாவட்ட பொரு ளாளர் ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சண்முகம், சி. முரளி, டி.லெனின் மகேந்திரன், சி. அங்கம்மாள், பி.ஆறுமுகம்,  ஆனஸ்ட்ராஜ், லில்லிபுஷ்பம் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலும், அதிய மான் கோட்டை பிஎம்பி பஞ்சாலை தொழிலாளர்கள் சார்பிலும்  வர வேற்பு அளிக்கப்பட்டது.