districts

img

முதல் தர வாக்காளர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு

தருமபுரி, ஏப்.19- தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட  மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெள்ளியன்று நேரில்  சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, தருமபுரி பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பேகரஹள்ளி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வாக்களித்துவிட்டு வந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ’ரோஜா பூ’ கொடுத்து ஊக்குவித்தார். அதேபோல், தருமபுரியில் முதன் முறையாக வாக்க ளிக்க வந்திருந்த இளம் வாக்காளரை வரவேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தார். முதல் வாக்காளருக்கு பரிவட் டம் கட்டி வரவேற்பு வழங்கியுள்ள இந்த சம்பவம், இளம்  வாக்காளர்கள் மத்தியில் ஊக்குவிப்பை ஏற்படுத்தியது.