திருப்பூர், ஜன. 10 - தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைத்து வெளி யிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வும், காலிப் பணியிடங்களை நிரப்பி கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் கருப்புத்துணி முக்காடு அணிந்து ஒப் பாரிப் போராட்டம் நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்கா லமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமலாக்க வேண்டும், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைத்தால் 500 பணியிடங்கள் ஒழிக்கப்படுவதுடன், 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சா வடி அமைத்து வசூல் கொள்ளை நடைபெறும். எனவே இந்த நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கும் அர சாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலைப் பணியா ளர் சங்கத்தினர் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். திருப்பூர் காலேஜ் ரோடு கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தின் கோட்டத் தலைவர் ஆர்.கருப் பன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டகிளைச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் எஸ். மதன்குமார் ஆகியோர் போராட் டத்தை வாழ்த்திப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் சு.செந்தில்நா தன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் கோட்டப் பொருளாளர் பி.விஸ்வநா தன் நன்றி கூறினார். அதேபோல், தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளின்று நடைபெற்ற கருப்புத் துணி முக்காடு போட்டு ஒப்பாரி வைக் கும் போராட்டத்துக்கு தாராபுரம் கோட்டத் தலைவர் கே.வெங்கிடு சாமி தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி கோட்டச் செயலா ளர் எல்.தில்லையப்பன் உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளைத் தலைவர் கே.செந்தில்குமார், மாவட்டத் தலைவர் ஏ.ராணி, மாவட் டப் பொருளாளர் பி.ஆறுமுகம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். பலர் கருப்பு முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினர். முடிவில் கோட்டப் பொருளாளர் எஸ்.முருகசாமி நன்றி கூறினார்.