districts

img

கார்ப்ரேட்டுகளின் கைக்கூலியான ஒன்றிய மோடி அரசை விரட்டியடிப்போம்

கோவை, மே 20- தொழிலாளர்களின் நலனை காவு கொடுத்து அம்பானி, அதானிகளுக்கு ஆதரவான கார்ப்ரேட்டுகளின் கைக் கூலியாக செயல்படும் ஒன்றிய மோடி  அரசை விரட்டியடிப்போம்; உழைக்கும் மக்கள் நலன் காக்க சமரசமின்றி போராடு வோம் என்கிற முழக்கத்துடன் கோவை யில் சிஐடியு நடைபயணம் எழுச்சியு டன் துவங்கியது. நூறு ஆண்டுகள் போராடி, தியாகம் செய்து பெற்ற தொழிலாளர் நலச்சட்டங் களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற் றியதை திரும்பப்பெற வேண்டும். நிரந் தர பணியிடங்களில் அவுட் சோர்சிங் முறை என்கிற தொழிலாளர் விரோத அரசாணைகளை திரும்பப்பெற வேண் டும். அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் ஓய் வூதியம், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயப்படுத்தக்கூடாது. குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் என சட்டமியற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உழைப் பாளிகள், பொதுமக்களிடம் வலுசேர்க்க சிஐடியு நடைபயண இயக்கத்தை திட்ட மிடப்பட்டுள்ளது.  மே 20 முதல் 30 வரை தமிழகத்தின் ஏழு முனைகளிலிருந்து சிஐடியு நடை பயண இயக்கத்திற்கு திட்டமிட்டு துவங்கியுள்ளது. திருச்சியில் சங்கமிக் கும் இந்த நடைபயண பிரச்சார இயக் கத்தின் ஒரு முனை கோவையில் துவங் கியது. கோவை, ஆவாரம்பாளையத்தில் பொதுக்கூட்டத்துடன் துவங்கிய நடை பயண இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்து  உரையாற்றினார். இதில், சிஐடியு மாநில துணைத்தலைவர்களான எம்.சந்திரன்,  எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங் கேற்றனர். முன்னதாக நடைபயண இயக்கத்தில், சிஐடியுவின் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிஐ டியு கோவை மாவட்ட தலைவர் கே. மனோகரன், பொருளாளர் ஆர்.வேலுச் சாமி உள்ளிட்டேர்ர நடைபயண இயக் கத்தில் பங்கேற்றனர். கணபதியில் சனியன்று காலை துவங் கிய பிரச்சார இயக்கம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணமாக பிரச்சாரம் மேற்கொண்டது. முன்ன தாக, நடைபயண பிரச்சார இயக்கத்தில் உடுமலை துரையரசன் கலைக்குழு வின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கணபதி பகத்சிங்புரத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்தை சிஐடியு தலை வர்களில் ஒருவரான, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங் கிரி துவக்கி வைத்தார். இந்த பிரச்சார இயக்கம் ரத்தினபுரி, டாடாபாத், வட கோவை சிந்தாமணி, பூமார்க்கெட், கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகர், கணுவாய் வழியாக  துடியலூரில் நிறை வடைந்தது. முன்னதாக, ஏஐடியுசி தலைவர்கள் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு, நடைபயண பிரச் சார இயக்கம் வெற்றி பெற வாழ்த்தி முழக்கமிட்டனர்.