districts

img

அரசியல் சாசன விழுமியங்களை பாதுகாப்போம்!

ஈரோடு, அக்.13- இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற சோசலிச குடியரசு - அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாப்போம் என்ற சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்திய நாட்டையும், மக்களையும், ஒருமைப்பாட்டையும் காத்திடுவோம். சிறு, குறு, நடுத்தர தொழில்கள், விவ சாயம் ஆகியவற்றைக் காப்போம் என சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு ஏ.எம்.திரு மண ஹாலில் வெள்ளியன்று நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகவள்ளி வர வேற்றார். “வண்ணங்கள் வேறு எண் ணங்கள் ஒன்றே” என்ற தலைப்பில் கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் உரையாற்றினார். “மரபு களை மறுத்த பாராளுமன்றம்” என்ற  தலைப்பில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றி னார். “பெண்ணியமும், அரசியல் சூழலி யலும்” என்ற தலைப்பில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க தேசிய இணைச்செயலா ளர் எம்.கிரிஜா கருத்துரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், சிஐடியு மாவட்ட செயலாளர் எச். ஸ்ரீராம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விதொச மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ச.விஜயமனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். வி.மாரிமுத்து நன்றி கூறினார்.