சென்னை, ஏப்.29- “பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பாவேந்தர் பாரதி தாசனின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “செந் தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வ துவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங் குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளி யை மதங்களிலே சாய்க் காமை வேண்டும்!” எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்பு னைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக் கான திட்டங்கள், பல மொழி பெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.