கோவை, ஆக.12- வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நோய் எதிர்ப்பு சத்து மருந்துகள் வழங்கிய மேட்டுப்பாளையம் கிழங்கு மண்டி வியாபாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வய நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்கு வதற்காக நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழுவினர் மற்றும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து அடிப்படை தேவைக்கான நிவாரணப் பொருட்களை சேக ரித்து வருகின்றனர். இதனையறிந்த மேட்டுப்பாளையம் கிழங்கு வியாபாரியும், சமூக ஆர்வலருமான கே.எஸ்.ஏ. அபூபக்கர் குடும்பத்தினர், வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரூ.30 லட்சம் மதிப்பி லான நோய் எதிர்ப்பு சத்து மருந்து மாத்திரைகளை அவரது மகன் அகமது ரபி, மருமகன் ஜியாவுதீன் ஆகியோர் சனியன்று நிவாரணப் பொருட்களை சேகரித்து வந்த மேட்டுப்பாளையம் சமூக நலக்குழுவினர் மற்றும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினரிடம் நேரில் வழங்கினர். இதைபோன்று, கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் யுனைடெட் கல்வி குழும அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு குடியமர்த்த ரூ.1 லட்சம் மதிப் பிலான தேவையான பாத்திரங்கள், விரிப்புகள், பாய்கள் பக் கெட், குடம், உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, சனியன்று மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலா ளர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர். இந்நிகழ்வில், யுனை டெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், யுனைடெட் நர்சிங் கல்லூரி முதல்வர் முனைவர் ரூபி அனிதா, பேராசிரி யர்கள் குமரேசன், தனுஷ், சோஜி மற்றும் மாணவர்கள் கவி பாரதி, ரஹீப், அபில் சாஜ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி னர்.