districts

img

வனத்திற்குள் தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீர் தொட்டி சீரமைப்பு

மேட்டுபாளையம், பிப்.24-  காட்டுக்குள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், காட்டுயிர்கள் தாகம் தீர்க்க வன எல்லைகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தாகம் தீர்க்க  வனத்துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி யில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச் சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை,  கரடி, காட்டெருமை, மான் என ஏராளமான  வன உயிரினங்கள் உள்ளன. மேட்டுப் பாளையம் வனப்பகுதி யானைகளின் வலசை பாதை என்பதால் காட்டு யானை களின் எண்ணிக்கை அதிகம். கடந்த இரு மாத  காலத்திற்கும் மேலாக இக்காட்டு பகுதியில் மழை இல்லாத காரணத்தினாலும்  பகல்  நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க  துவங்கிவிட்டதாலும் வனத்தினுள் உள்ள  இயற்கையான நீராதாரங்கள் வறண்டு வரு கின்றன. வனக்குட்டைகள், நீரோடைகள், மழை நீர் தடுப்பணைகள் என அனைத்தும் காய்ந்து போய் காட்டுக்குள் வாழும் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. வனத்தினுள் நீர் கிடைக் காத போது யானை போன்ற வன விலங்குகள் காட்டையொட்டியுள்ள ஊர் களுக்குள் தண்ணீர் தேடி நுழைந்து விடும்  என்பதால் இதனை சமாளிக்க வன எல்லை களில் வனத்துறை சார்பில் செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு அதில்  நீர் நிரப்பி வைப்பது வழக்கம். தொட்டியில்  உள்ள நீரை அருந்தி தாகம் தீர்க்கும் யானை கள் ஊருக்குள் புகாமல் காட்டுக்குள் திரும்பி  விடும். இதனால் கோடை காலங்களில் வனத்தினுள் ஏற்படும் வறட்சி ஓரளவேனும் சமாளிக்கப்பட்டு யானை-மனித மோதல்கள் தவிர்க்கப்படும்.  ஆனால், இந்த தண்ணீர் தொட்டிகள் பல ஆண்டுகளாக  பராமரிக்கப்படாமல் இருந்த காரணத்தினால் இவை பழுதடைந்தது விரிசல்களுடன் காணப்பட்டன. இதனால், இத்தொட்டிகளில் தண்ணீர் தேக்க இயலாமல் வீணாகி கிடக்கும் சூழலே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வரும்  கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் பழுதடைந்தது கிடக்கும் தொட்டிகளை கண்டறிந்து அவற்றை புதுப்பித்து சீரை மைக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இவ்வனப்பகுதியில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளும் ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.