திருப்பூர், ஏப். 21 - திருப்பூர் அனுப்பர்பாளை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறது. வேலம்பாளையம் நகரப்பகு திக்கு உட்பட்ட, அனுப்பர்பாளை யம் பேருந்து நிறுத்தம் அரு கில், கோடைக் கால தாகம் தீர்க் கும் தண்ணீர் பந்தல் பல்லாயிரக்க ணக்கான மக்களின் தாகத்தைத் தணித்து வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினர் அ.ஆறுமுகம், இப்ப குதி நன்கொடையாளர்கள் மூல மாக இந்தத் தண்ணீர்ப் பந்தலை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். தினசரி தண்ணீர் கேன்கள் மூலம் குடிநீர் வழங்குவதோடு, ஞாயிறு தோறும் காலை முதல் மதியம் வரை நீர் மோர், கம்மங்கூழ் ஆகியவையும் நன்கொடையாளர் கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். மேலும், இப்பகுதி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர், பாத்திரத் தொழிலாளர் சங்கத் தினர், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் வேலை செய்யும் மக்க ளுக்கு ஏற்படும் கடும் நீரிழப்பை ஈடுசெய்யும் வகையில் செயல் பட்டு வரும் தண்ணீர் பந்தல் மக்க ளின் மனங்களையும், வயிறுக ளையும் குளிரச் செய்கிறது என் றால் மிகையல்ல. அவிநாசி இதேபோன்று, அவிநாசி லிங் கேஸ்வரர் கோவில் தேர் திரு விழாவை ஒட்டி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட நிர்வாகி வழக்கறி ஞர் மோகன், ஒன்றிய கவுன்சி லர் முத்துசாமி, அவிநாசி ஒருங்கி ணைப்பாளர் பழனிசாமி, நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்கு மார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.