districts

img

மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஜூலை 30- மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் செவ் வாயன்று தண்ணீர் திறக்கப்பட்ட தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாச னப் பகுதியில் உள்ள நிலங்களின் பாசனத்திற்கு மேட்டுர் அணையிலி ருந்து செவ்வாயன்று மாவட்ட ஆட் சியர் இரா. பிருந்தாதேவி தண்ணீர் திறந்து வைத்தார். இதுகுறித்து, ஆட்சியர் கூறுகையில், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு  மாவட்டங்களிலுள்ள பாசன நிலங் கள் பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்க ளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது. மேட்டூர் அணை கால்வாய் களில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தண்ணீர் திறந்து விட பாசன விதி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பி னும் தண்ணீர் இருப்பை கருத்திற் கொண்டு, முன்னதாகவே விவசா யப் பணிகளுக்கு காய்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  தற்போது விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளது. பிறகு தேவைக்கேற்ப நீர் திறப்பு படிப்படியாக 1000 கன அடி யாக உயர்த்தப்படும்.  மேட்டுர் கிழக்கு மற்றும் மேற்கு  கரை கால்வாய்கள் மூலம் முறையே 27 ஆயிரம் ஏக்கரும், 18 ஆயிரம் ஏக்க ரும் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக் கர் பாசன வசதி பெறுகின்றது. இவற் றில் சேலம் மாவட்டத்தில் 16 ஆயி ரத்து 443 ஏக்கரும், ஈரோடு மாவட் டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயி ரத்து 327 எக்கர் நிலங்களும் பாசன  வசதி பெறுகின்றன. மேட்டுர் அணை யின் தீர்மட்டம் 119:43 அடியாக வும், கொள்ளளவு 92.565 டி.எம்.சி  ஆகவும் உள்ளது, என்றார், இந்நிகழ் வின்போது, சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர்  ரா.ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், நீர்வளத்துறை அதிகாரி கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், விவசாய பெருமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பாசனத்திற்கான நீரை முன்கூட்டியே திறக்க முதலமைச் சர் உத்தரவிட உள்ளார். இதற்காக விவசாயிகள் சார்பில் நாங்கள் முத லமைச்சருக்கும் , எங்களின் நெடு நாள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் வடக்கு சட் டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோருக்கும் எங்களது நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் 40,000 ஏக்கர் பாசன வசதி பெறும். இதனால் விவசா யிகளாகிய நாங்கள் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம், என்றனர்.