உடுமலை, ஜன.8- திருமூர்த்தி அணையிலி ருந்து நான்காம் மண்டல பாசன விளைநிலங்களுக்கு இரண்டாம் சுற்றாக ஜனவரி 6 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலை யில், தண்ணீர் திறப்பு காலம் முடிந்தும் கால்வாய்களில் தண்ணீர் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருமூர்த்தி அணையிலி ருந்து, நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர் களை காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த வருடம் அக்.11 வரை 21 நாட்களுக்கு ஒரு சுற்றுக்கு 2 ஆயிரம் மில்லி யன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து அணையின் நீர் இருப்பு தொடர்ச்சியாக நல்ல நிலையில் இருந்ததால் மீண்டும் நான்காம் சுற்றுப் பாசன விவசாயிக ளுக்கு இரண்டாம் சுற்றாக டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் ஒரு சுற்றுக்கு 2000 கன அடிக்கு மிகாமல் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை நிலவரம் படி அணையின் நீர்மட்டம் 36.15 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு கன 769 அடியாகவும் இருந்த நிலையில், நீர் வெளிய ேற்றம் 751 கன அடியாக உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவியது. திட்டத் தொகுப்பு அணை களிலும் நீர் இருப்பு பெருமளவு குறைந்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நான்காம் மண் டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட வில்லை. 5 சுற்றுகள் தண்ணீர் வழங்குவதி லும் சிக்கல் ஏற்பட்டு இரண்டு சுற்று மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தண் ணீர் திறப்பு காலம் முடித்தும் அணையில் நீரை சேமிக்காமல் தொடந்து கால்வாயில் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.